மக்கள் உரிமை படியுங்கள்

Saturday, May 15, 2010

மேல்படிப்பு தொடர பண உதவி வேண்டும் :மாநில ரேங்க் மாணவி வேண்டுகோள்


தூத்துக்குடி : பிளஸ் 2வில் உளவியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த காயல்பட்டணம் பள்ளி ஏழை மாணவி பாத்திமுத்து, தனது மேல்படிப்பு தொடர யாராவது பணஉதவி செய்யவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். திருச்செந்தூர்அடுத்த காயல்பட்டணம் பரிமார் தெருவைச் சேர்ந்தவர் பாத்திமுத்து. அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியான இவர், பிளஸ் 2வில் உளவியல் பாடத்தில் 200க்கு 172 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை அபுமுகமது, சென்னையில் சமையல் தொழில் செய்து வருகிறார். இவரது தாயார் பால் அமீனா, ஆறு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் உள்ளனர். பாடவாரியாக

இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் -123, ஆங்கிலம் -92, மனை இயல் -125, உளவியல் -172, எழுத்து மற்றும் செய்முறை தேர்வு - 366. மொத்தம் - 878/1200.

பாத்தி முத்து கூறுகையில்,' எனது இந்த சாதனைக்கு பெற்றோர், ஆசிரியர்கள் காரணம். நர்சிங் அல்லது ஆசிரியர் பயிற்சி படிக்க விரும்புகிறேன். அதற்கு போதுமான பண வசதியில்லை. யாராவது பண உதவி செய்தால் மேல்படிப்பை தொடர தயாராகவுள்ளேன்'' என்றார்.

உதவி செய்ய நீங்கள் தயாரா ? : இந்த ஏழை மாணவிக்கு நமது வாசகர்கள் பலர் உதவி செய்ய தயாராக இருப்பதாக மெயில் மூலமும் , வாசகர் பகுதி மூலமும் தெரிவித்திருந்தனர். அவர்கள் ஈகை எண்ணத்தை ஈடேற்றிட மாணவி பாத்திமுத்துவின் முகவரியும், மொபைல் எண்ணும் தரப்பபட்டுள்ளது. உதவி செய்ய விரும்புவோர் இவர்களிடம் தொடர்பு கொள்ளலாம்.

முகவரி: பாத்திமுத்து, பா/ கா . நாகூர் முத்து , 49 பள்ளிமார்தெரு, காயல்பட்டணம், தூத்துக்குடி மாவட்டம் , மொபைல் எண்: 9698386885 .

பஸ்சில் மின்சாரம் பாய்ந்து 28 பயணிகள் கருகி பலி


மத்திய பிரதேசம் மண்ட்லா மாவட்டத்தில் சுராஜ்புரா என்ற கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து 28 பஸ் பயணிகள் உடல் கருகி இறந்தனர்.

திருமண கோஷ்டியினர் சென்ற பஸ்சின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சமையல் பாத்திரம் மற்றும் இரும்பு அடுப்பு, உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதால், அதன் மூலம் பஸ்சில் மின்சாரம் பாய்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்தவர்களில் 28 பேர் உடல் கருகி பலியானார்கள். இவர்களில் 12 பேர் பெண்கள். 3 பேர் குழந்தைகள். பலர் படுகாயம் அடைந்தனர்.