மக்கள் உரிமை படியுங்கள்

Sunday, January 31, 2010

இலங்கை முஸ்லிம்களிடம் இருந்தும் விடுதலை புலிகள் பறித்த நான்காயிரம் கிலோ தங்கம் எங்கே?


அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, பொன்சேகா மீது புதியக் குற்றச்சாட்டுகளை சுமத்தி விசாரணை நடத்த இலங்கை அரசு தீவிரம் காட்டுகிறது. உள்நாட்டுப் போரின் போது, புலிகளிடம் கைப் பற்றப்பட்ட நான்காயிரம் கிலோ தங்கம் பற்றிய விசாரணையும் நடக்கும் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புலிகள், இயக்கம் துவங்கியபோது, தமிழர்களிடம் இருந்து பணம், பொருட்களை கட்டாயமாக பெற்றனர். யாழ்ப்பாணம் பகுதியில் இருந்த பல ஆயிரம் முஸ்லிம்கள், புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட போது, உடமைகள் எதையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் 1990 ம் ஆண்டு, ஜூன் 29 ம் தேதி தமிழீழ மீட்பு நிதியம் ஒன்றை புலிகள் துவங்கினர். இதில் நிதியை சேர்க்க பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டனர். அதன் ஒரு பகுதியாக குடும்பத்துக்கு தலா இரண்டு பவுன் தங்கம் கொடுக்க வேண்டும் என்று 1990 ம் ஆண்டு ஜூலை 1 ம் தேதி அறிவிப்பு வெளியிட்டு, கட்டாய வசூலில் ஈடுபட்டதாக யாழ்ப்பாணம் வாசிகள் கூறினர்.

பெருஞ்செல்வந்தர்களாக இருந்த முஸ்லிம் குடும்பப் பெண்களிடம் இருந்த தங்கம் மற்றும் மதிப்பு மிக்கப் பொருட்களை புலிகள் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இது போல் பல முறை நடந்துள்ளதாக யாழ்ப்பாணம் வாசிகள் கூறினர். அப்போது பறித்து புலிகளின் பிடியில் வைத்திருந்த தங்கம் 4 ஆயிரம் கிலோ என்று உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த தங் கம் மற்றும் தங்க நகைகள் பற்றிய கேள்வி இப்போது எழுந்துள்ளது.வெளிநாடுகளில் வசூலித்த பணம் மற்றும் போதை மருந்து கடத்தலில் கிடைத்தப் பணத்தில் தான் புலிகள் ஆயுதங்களை வாங்கிவந்தனர்.

நன்றி: தினமலர் நாளிதழ்

After dramatic rise, UK suspends student visa applications


New Delhi, Jan 30 (IANS) Suspecting rampant abuse after a 650 percent increase in student visa applications in three months, the British High Commission has temporarily suspended acceptance of new visa applications of students with effect from Feb 1 in north India.

'From Feb 1, United Kingdom High Commission will stop accepting student visa applications under Tier 4 of the points based system at visa application centres in New Delhi, Chandigarh and Jalandhar,' the regional director of UK Border Agency, Chris Dix, told reporters here Saturday.

The decision was taken after a 'dramatic' increase in student visa applications. Between October to December 2009, the number of student visa applications in northern India jumped to 13,500, compared to 1,800 in 2008 and 1000 in 2007 for the same period.

'This will allow us to properly scrutinize applications thoroughly and manage the visa process efficiently for all customers in North India,' said Dix, who heads India visa operation which is UK's largest in the world. He said that the applications will be examined to see if they are genuine applicants and are financially capable of studying in Britain.

The high commission official asserted that it was a 'local solution to a local problem'.

All those applicants who have already got appointments before Feb 1 will have their application processed as normal. But, all the appointments given after Feb 1 will be suspended for now. All new applications will of course not be accepted as well.

This order will not affect the Western and South India visa application centres. 'Applicants should first contact through e-mail for appointments in those centres to see if their application will be accepted. I would strongly advise against travelling first to see if they can get appointments in person,' said Dix.

He noted that the reasons for the sharp increase could be the 'good opportunities' provided in his country as well as the decrease in number of students in some other countries. When asked the drop in number of students to Australia was a factor, Dix said, 'It might be'.

But officials suspect that the main cause was rather a more rampant abuse of the system.

British deputy high commissioner Nigel Casey said that the suspension decision was a combination of the dramatic number increase in applications as well as concern about its quality.

'Some people in north India are perhaps spreading the news that student visa is a good way to settle in UK,' he said.

Out of the 13,500 applications, some of them had been examined found to have 'causes for concern'.

'Part of the reason (for the suspension) is that the we don't have the resources to scrutinise the applications throughouly,' said Casey, adding that the Indian government had been informed in 'general terms that there was a rise in student visas last year which will affect our customer service deadlines'.

Stressing that the suspension is only temporary, UK Border Agency official Dix said that a review would be done at the end of February.

A similar temporary suspension was done last year in China when there was a sharp rise in applications from a certain province.

Wednesday, January 27, 2010

18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் : மீண்டும் அதிபரானார் ராஜபக்சே

கொழும்பு : இலங்கையின் அதிபராக, ராஜபக்சே 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து நின்ற சரத் பொன்சேகாவை விட 18 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று ராஜபக்சே அபார வெற்றி பெற்றுள்ளார். இத்தேர்தலில் ராஜபக்சே 50 லட்சம் வாக்குகளும், பொன்சேகா 32 லட்சம் வாக்குகளும் பெற்றுள்ளனர்.அதிபர் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் வெடி வெடித்தும், இனிப்புக்கள் வழங்கியும் இவ்வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக நேற்று நடந்த தேர்தலில், 70 சதவீத ஓட்டுகள் பதிவாகின. ஓட்டுப் பதிவு முடிந்த அடுத்த சில மணி நேரத்திலேயே ஓட்டு எண்ணும் பணி விறுவிறுப்பாக துவங்கியது.மொத்தம் 22 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். ஆளுங்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் தற்போதைய அதிபர் ராஜபக்சேவுக்கும், எதிர்க் கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் நடக்கும் தேர்தல் என்பதால், சர்வதேச அளவில் இதன் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வன்முறைகளை தவிர்க்கும் வகையில், நாடு முழுவதும் 68 ஆயிரம் போலீசாரும், ராணுவ வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருந்தாலும், ஓட்டுப் பதிவு துவங்குவதற்கு முன்னரே, தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம் பகுதியில் பல்வேறு இடங்களில், தொடர்ச்சியாக கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதனால், மக்களிடையே பீதி ஏற்பட்டது. இந்த குண்டு வீச்சு சம்பவங்களால், ஓட்டுப் பதிவு பாதிக்கப்படவில்லை என்று, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பொன்சேகாவுக்கு ஓட்டு இல்லை:
அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவின் பெயர், வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால், அவரால் ஓட்டளிக்க முடியவில்லை. இதையடுத்து, போட்டியில் இருந்து அவரது பெயர் தகுதி நீக்கம் செய்யப்படும் என, ஆளுங் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து இலங்கை தேர்தல் கமிஷனர் திசநாயகா கூறுகையில், ""வாக்காளர் பட்டியலில் சரத் பொன்சேகாவின் பெயர் இல்லை என்ற காரணத்துக்காகவோ அல்லது அவர் ஓட்டளிக்கவில்லை என்பதற்காகவே, போட்டியில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்ய முடியாது. ""அவர், தேர்தலில் வெற்றி பெற்றால், அவரது வெற்றியை செல்லாது என, அறிவிக்க முடியாது,'' என்றார்.

தமிழர்கள் ஓட்டு பெற்றும் தோல்வி
: இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், தமிழர்கள் யாருக்கு ஓட்டளித்தனர் என்ற குழப்பம் நீடித்தது. இலங்கையில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, வவுனியா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தமிழர்களும் பங்கேற்று ஓட்டளித்தனர். அந்த பகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப் பதிவு நடந்தது. இருந்தாலும், இலங்கையின் மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது, தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் ஓட்டுப் பதிவு குறைவாகவே இருந்தது. தமிழர்கள் ஓட்டு தான், அதிபர் தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் ஓட்டாக கருதப்பட்டது. தமிழர்கள் பகுதியில் பொன்சேகா அதிக வாக்கு பெற்றும் அவர் தோல்வி அடைந்துள்ளார். தமிழர் பகுதிகளில் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உயிர் பயத்தில் பொன்சேகா : இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இலங்கை முன்னாள் ராணுவ தளபதியும் அதிபர் தேர்தல் வேட்பாளருமான சரத் பொன்சேகா குற்றம்சாட்டி உள்ளார். இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் பொன்சேகா தனது இல்லத்தில் தங்காது, கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி உள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே முறைகேடு செய்துள்ளார்; தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் என்னை கொலை செய்துவிடும்படி இலங்கை ராணுவத்தினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்; இதனால் இலங்கை ராணுவத்தினர் நான் தங்கி இருக்கும் ஹோட்டலை முற்றுகையிட்டுள்ளதுடன், அங்கிருக்கும் பொதுமக்களை வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்; அதிபர் தேர்தலில் போட்டியிடுவதால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அல்குர்ஆன் சொல்லும் தன்னந்தனியே நிற்கும் நாள்.........

அல்குர்ஆன் :
73:14. அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்ககளாகிவிடும்.
82:1. வானம் பிளந்து விடும்போது
82:2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
82:3. கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
82:4. கப்றுகள் திறக்கப்படும் போது,
82:5. ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
81:1. சூாியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது
81:2. நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
81:3. மலைகள் பெயர்க்கப்படும் போது
101:4.அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
80:34.அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
80:35.தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
80:36.தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
80:37.அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
22:2. அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல
39:68. ஸுர் (எக்காளம்) ஊதப்படடால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.
50:41.மேலும், சமீபமான இடத்திலிருந்து கூவி அழைப்பவர் அழைக்கும் நாளை(ப் பற்றி நபியே!) நீர் செவிமடுப்பீராக.
50:42. அந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மாித்தோர்) வெளியேறும் நாளாகும்.
36:51. மேலும், ஸுர் ஊதப்படடதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.
36:52. ''எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?"" என்று அவர்கள் கேட்பார்கள்
39:68. ஸுர் (எக்காளம்) ஊதப்படடால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.
19:80.இன்னும் (தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவற்றையும் நாம் அனந்தரங் கொள்வோம்; (இவற்றையெல்லாம் விட்டு) அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான்.
50:22.''நீ இதைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய்; (இப்பொழுது) உன் (பார்வையை) விட்டு உனது திரையை நாம் அகற்றி விட்டோம். எனவே, இன்று உன் பார்வை கூர்மையாக இருக்கிறது."" (என்று கூறப்படும்).
10:45.அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில், தாங்கள் (ஒரு) பகலில் சொற்ப காலமே இவ்வுலகில் தங்கியிருந்ததாக (அவர்கள் எண்ணுவார்கள் ; அப்போது) தம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்து விட்டார்கள்; மேலும் அவர்கள் நேர்வழி பெற்றிருக்கவில்லை.
79:35. அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
23:101.எனவே ஸ_ர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது; ஒருவருக்கொருவர் விசாாித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
44:41.ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
70:10. (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாாிக்கமாட்டான்.
82:19. அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.
3:30. ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன்முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்;.
14:43. (அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும், விரைந்தோடுபவாகளாகவும் அவர்கள் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது. இன்னும், அவர்களுடைய இருதயங்கள் (திடுக்கங்க கொண்டு) சூணியமாக இருக்கும்.
18:48.அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வாிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; ''நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்"" (என்று சொல்லப்படும்).
18:49.இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், ''எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பொியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவ வில்லையே!"" என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்
24:24. அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும்.
41:20.இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராகன அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.
41:21.அவர்கள் தம் தோல்களை நோக்கி, ''எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறுனீர்கள்?"" என்று கேட்பார்கள்; அதற்கு அவை; ''எல்லாப் பொருட்களையும் பேசம் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசம்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்"" என்று கூறும்.
70:10. (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாாிக்கமாட்டான்.
70:11.அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாாித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிாியப்படுவான்: தன் மக்களையும்-
70:12.தன் மனைவியையும், தன் சகோதரனையும்-
70:13.அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-
70:14.இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிாியப்படுவான்).
52:46. அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது, அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
36:65. அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
69:25. ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; ''என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
69:26. ''அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-
69:27. ''(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?
69:28. ''என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!
69:29. ''என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!"" (என்று அரற்றுவான்).
69:30. ''(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அாிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.""
69:31. ''பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.
25:27. அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக்கொண்டு; ''அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?"" எனக் கூறுவான்.


" அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் நேர்வழி காட்டுவானாக ஆமீன்"

தமிழகத்தில் மரபணு கத்தரிக்காய்க்கு தற்காலிக தடை


"மரபணு மாற்றுக் கத்தரிக்காய் குறித்து அரசு முடிவெடுக்கும் வரை, அதை விற்கவோ, பயிரிடவோ அனுமதிக்கப்படாது' என, முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு செய்திக் குறிப்பு: முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில், பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பு, தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கம், பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு, பெண்கள் இணைப்புக் குழு ஆகியவற்றின் நிர்வாகிகள் சந்தித்து, மரபணு மாற்றுக் கத்தரிக்காயை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டனர். முதல்வர் கருணாநிதி, அதுபற்றி அரசு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காது என்றுதெரிவித்தார்.மேலும், எந்தவொரு அதிகாரியும் தமிழக அரசு முடிவெடுக்கும் வரை, இதை விற்கவோ, பயிரிடவோ அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருப்பதாக அவர்களிடம் தெரிவித்தார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, January 26, 2010

Homes evacuated in San Antonio as hill crumbles


SAN ANTONIO – Construction crews moved dirt to shore up a group of houses precariously perched on a crumbling hill in San Antonio on Monday as engineers tried to determine why the land below was shifting, causing dozens of homes to evacuate.

Gaping crevices, some 15 feet deep, cut across several yards as dirt cascaded into a towering stone retaining wall that nearly split in half. Fences crumpled like accordions as crews packed dirt under one home and around its exterior after part of its foundation was exposed.

One soil expert said the cause of the landslide appeared to be the result of poor retaining wall design, and a city official said the nearly 1,000-foot-long wall in the upper-middle class neighborhood of sprawling two-story homes was built without a permit.

No one has been injured, but about 80 homes were evacuated on Sunday after a resident in the northwest side subdivision reported that his backyard was sliding down hill. By Monday afternoon, residents in about 55 of those homes were allowed to return after inspections and soil monitoring found them to be safe, said Valerie Dolenga, a spokeswoman for Pulte Homes Inc., the parent company of the neighborhood's builder, Centex Homes.

One neighbor who was among the first homebuyers in the subdivision set among rolling hills on the outskirts of San Antonio said he was initially told no homes would be built on the crumbling ridge because it was too steep.

Romeo Peart, 32, said one retaining wall failed several years ago before the current one was built and homes were constructed above it.

"They can keep the view now," Peart said, shaking his head as heavy equipment stuffed dirt beneath an exposed foundation. "And they paid an extra $10,000 for those lots."

The development, which was started in 2004, has nearly 750 homes with others under construction. The neighborhood, with houses selling for $250,000, is one dozens that have sprung up on hilly former ranch land as San Antonio grew to be the nation's seventh largest city.

The near-vertical retaining wall likely failed under the weight of the area's clay soil that readily expands when drenched with heavy precipitation as it was last week, said Sazzad Bin-Shafique, an assistant engineering professor and soil expert at the University of Texas-San Antonio who went out to the site on Monday. Steep, tall retaining walls can hold up if built correctly, he said.

"It's safe, honestly. We have engineering solutions, but sometimes we do something because we want to reduce costs," Bin-Shafique said. "Many times, it will be OK, but sometimes, it will not."

Roderick Sanchez, the city's planning and development director, said the builder built the retaining wall without a permit. The city was still waiting for verification that the wall was designed by a certified engineer and built to specifications, Sanchez said.

Dolenga said the city approved construction plans for the subdivision including the retaining wall, though she said the company was investigating the permit allegation. She said she didn't know if the street with the now-jeopardized homes was added later to the subdivision's plans, though developments are usually built in phases.

"We've been building out there a long time. This is an unusual circumstance," she said.

Engineers spent Monday assessing each of the structures in the evacuated area, while fire officials escorted some families to retrieve belongings from the neighborhood. At least seven homes would likely remain vacant for an extended period, said Fire District Chief Nim Kidd, who is also the head of the city's emergency management office.

Kenny Crawford, 32, asked fire officials to be allowed to retrieve his car and some belongings on Monday, but because his home is directly below the disintegrating wall, he and his girlfriend were told it was too dangerous.

"They really haven't given us any info," Crawford said. "We don't know what's going to happen. Of course, property values are going to fall."

Dolenga said geologists and engineers were looking for a cause of the slide and monitoring for any additional movement of the dirt that was sliding at a rate of 4-inches-an-hour on Sunday. She did not know if there was additional movement on Monday.

Utilities were cut off in the area, and construction crews were moving dirt to shore up the homes on the hill and to protect those below the retaining wall.

Resident Lakeika James, 41, said she had noticed odd noises over the three years she has lived in her house.

"I would hear, laying in my bed at night, grumbling and vibrations. A few nails popped out lately," she said.

She said she hadn't planned on staying in the house long-term, and now after the landslide, the mother of a 5-year-old girl wants out.

"I'm just going to be uncomfortable and worried for my family," she said.

கோபம் தன்னையே அழித்து விடும்




உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) - புகாரி) (Volume 8, Book 73, Number 135)
"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்" என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்...
கோபம் ஏன் ஏற்படுகின்றது?
கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.

· நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது...

· நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது...

· நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது...

· எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது ...இப்படியே பல காரணங்கள் உள்ளன.
ஒருவன் நம்மைப் பார்த்து "கழுதை" என்று திட்டும்போது நாம் "குரங்கு" என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.
ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.
கோபம் தன்னையே அழித்து விடும்
மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து - பாராட்டி - உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும்.
ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.
கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்...

· வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)

· திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.

· தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது.

· மனஇருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.

· முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது....கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.

· கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும்.

· இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான்.

· மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.
கோபத்தைக் கட்டுப்படுத்துதல்:
கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

கோபத்தை குறைக்க சில வழிகள்:


1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.

2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்

4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.

5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்

7. நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

8. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.

9. சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.

10. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

11. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.நீண்ட நாள் சந்தோசமாக வாழ வேண்டுமானால் நிச்சயம் நாம் கோபத்தை குறைத்தாக வேண்டும்.