மக்கள் உரிமை படியுங்கள்

Tuesday, March 16, 2010

ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி புற்றுநோயை குணப்படுத்தும் சிகிச்சை அறிமுகம்


நம்நாட்டில் 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர் ஓராண்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். சமீபகாலமாக நம்நாட்டில் மார்பக புற்றுநோயை விட கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களுக்கு, கீமோ சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகின்றன. இந்த சிகிச்சையால் முடி கொட்டுதல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகிய பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாது, புற்றுநோய் செல்களுடன் ஆரோக்கியமான செல்களும் அழிக்கப்படுகின்றன.

இந்த சிகிச்சைக்கு மாற்றாக புற்றுநோய் செல்களை அழிக்கும் வைரசை ரத்தத்தில் செலுத்தும் முறை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை ஏற்கனவே, பிரிட்டனில் நடந்துள்ளது. நல்ல பலன் கிடைத்துள்ளதால், அரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் கட்டமாக 20 முதல் 50 புற்றுநோயாளிகளுக்கு இந்த பரிசோதனை செய்யப்பட உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத எலிகளை கொண்டு ஒரு பரிசோதனை செய்யப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியில்லாத இரண்டு எலிகளின் கட்டியில் ஆன்கோலைட்டிக் வைரஸ்கள் செலுத்தப்பட்டன. இந்த வைரஸ் செலுத்தப்பட்டதும் எலிகளின் உடலில் இருந்த கட்டி இரண்டு வாரத்தில் மறைந்துவிட்டது. இந்த வைரஸ் புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால், மனிதர்களுக்கும் இந்த சோதனை நடத்தப்பட்டது. பிரிட்டனை தொடர்ந்து இந்தியாவில் இந்த சோதனை முதல் முறையாக தற்போது நடக்கிறது.

"China Approves World's First Oncolytic Virus Therapy For Cancer Treatment"

Oncolytic virus research got a welcome boost last November when Chinese regulators approved the world's first oncolytic viral therapy for cancer, Shanghai Sunway Biotech's genetically modified adenovirus H101.

"It's fantastic for the field," said John Bell, Ph.D., of the Ottawa Health Research Institute in Canada. "We needed to have something that was a success, and so I think this is a good first start."

"ALLAH KAREEM"

ஜப்பான் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் தயாரிக்க கூட்டுத் தொழில்நுட்பம்


ஜப்பானில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் கார்களை பிரபலப்படுத்த ஜப்பான் எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளர்கள் மற்றும் ஜப்பானிய கம்ªபனிகள் மற்றும் வெளிநாட்டுக் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து கூட்டு தொழில் நுட்ப கம்பெனி ஒன்றை உருவாக்கி உள்ளன.பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக நாடுகள் எல்லாம் முயற்சி செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் கார்களுக்கு பதிலாக எலக்ட்ரிக் கார்களை கம்பெனிகள் தயாரித்து வருகின்றன. இதனால் பெட்ரோல், டீசல் செலவு குறைகிறது.

எலக்ட்ரிக் கார்களுக்கு மாறுவதன் மூலம் பெட்ரோல், டீசல் உபயோகத்தைக் குறைத்து அதன் மூலம் நச்சு வாயுக்கள் வெளியாவதைக் குறைக்க வேண்டும் என்பது ஜப்பானிய அரசின் பருவநிலை மாற்றக் கொள்கையின் முக்கிய அம்சமாக உள்ளது.டொயோட்டா, நிசான், மிட்சுபிஷி, ஃபியுஜி ஹெவி இண்டஸ்ட்ரிஸ், டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனிய¤ன் பிரதிநிதிகள் டோக்கியோவில் கூடி இது குறித்து விவாதித்தனர். இந்தக் கம்பெனிகள் லீஃப் என்ற பெயரில் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்க உள்ளன.

எலக்ட்ரிக் கார்களுக்கான ரீசார்ஜிங்கின் போது இருக்கவேண்டிய வோல்டேஜ், வேகம், தொழில் நுட்பம் ஆகியவைகளுக்கான ஒரே மாதிரியான தரநிலைகளை கூட்டுத் தொழில் நுட்ப நிறுவனம் உருவாக்கும். ஜப்பானுக்கான தரநிலைகள் வகுக்கப்பட்ட பிறகு அவை சர்வதேச தரநிலைகளாக மாற்றப்படும்.

Sunday, March 14, 2010

பேராசிரியர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தழுவினார்


தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் பேராசிரியருமான முனைவர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார் தாசன். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மாவில் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று (மார்ச் 12) அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனிதமக்கா சென்று உம்ரா நிறைவேற்றுகிறார்.

பெரியார் தாசன் தனது இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட செய்தி அறிந்து ரியாதில் இருந்த அவரிடம் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பத்தாண்டுகளாக தனது உள்ளத்தில் ஏற்பட்ட முடிவை இப்போது தான் நிறைவேற்ற முடிந்தது என்று பெரியார் தாசன் குறிப்பிட்டார்.

அல்லாஹு அக்பர்.

Thursday, March 11, 2010

பப்பாளி இலைச் சாறு புற்றுநோய் செல்களை அழிக்கிறது


உலர்ந்த பப்பாளி இலை தூளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கசாயம் அல்லது வடி நீர் பத்து வெவ்வேறு வகையான புற்றுக்கட்டிகளின் செல்களைக் கொன்று அதன் வளர்ச்சியைக் குறைக்கிறது என புளோரிடா பல்க¬லைக் கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் பப்பாளி இலையிலிருந்து எல்லா வகையான புற்று நோய்களுக்கும் மருந்து தயாரிக்கும் வாய்ப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.புளோரிடா பல்கலைக் கழக ஆய்வாளர் டாக்டர் நாம் தாங் மற்றும் ஜப்பானில் உள்ள ஆய்வாளர்கள் பப்பாளி இலையில் உள்ள வேதிய¤யல் பொருள்கள் புற்றுக்கட்டிகள் மீது என்ன பாதிப்பை ஏற்படுத்துகின்றன என ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். ஆய்வுக்காக பப்பாளி இலையை காய வைத்து இடித்து பொடியாக்கினர். அந்த பப்பாளி இலைத் தூளை கொதிக்கும் வெந்நீரில் போட்டு அதில் இருந்து வடி நீர் தயாரித்தனர்.

ஏற்கெனவே ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்ட செர்வைக்ஸ், மார்புப் புற்று, ஈரல் புற்று, நுரையீரல் புற்று, கணையப்புற்று போன்ற 10 வகை புற்றுக்கட்டிகள் மீது நான்கு திறனிலைகளில் தயாரிக்கப்பட்ட இந்த வடிநீரைச் செலுத்தி சோதனை செய்தனர். எல்லா புற்று நோய்க்கட்டிகளின் வளர்ச்சி வேகமும் குறைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. வடி நீர் செலுத்தப்பட்ட 24 மணி நேரத்துக்குப் பிறகு புற்றுக் கட்டிகளை சோதிக்கும் புற்று நோய்க்கட்டிகன் வளர்ச்சி குறைந்ததை அறிந்தனர். எவ்வளவு வடி நீர் அதிகமாக ஒரு புற்றுக்கட்டிக்கு தரப்பட்டதோ அந்த அளவுக்கு புற்றுகட்டிகளின் வளர்ச்சி குறைவாக இருந்தது.
பப்பாளி இலை வடி நீர் எப்படி புற்றுக்கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கிறது என்பதை அறிய லிம்போமோ வகைப் புற்றுக்கட்டிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டன. புற்றுக்கட்டிகள் வளரக் காரணமான செல்கள் தாமாகவே அழிய தேவையான தூண்டுதலை பப்பாளி இலைவடிநீர் தருவதாகக் கண்டறிந்துள்ளனர்.

சிறந்த நினைவு பரிசாம் பாண்டா கரடி சாணிக்கு ஆஸ்திரேலியாவில் மவுசு...??


ஆஸ்திரேலியாவில் பாண்டா கரடிகளின் சாணியை நினைவுப் பரிசாக வைத்திருப்பதை பலர் பெருமையாக கருதுகின்றனர். எனவே, 200 கடைகளில் விற்பனை தூள் பறக்கிறது.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் வனவிலங்கு பூங்கா உள்ளது. அங்கு சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 2 பாண்டா கரடிகள் உள்ளன. பெயர் வாங் வாங், ப்யூனி. அவற்றுக்கு சீனாவில் இருந்து சிறப்பு மூங்கில் இலைகள் விமானத்தில் வரவழைக்கப்பட்டு உணவாக தரப்படுகின்றன.

இந்த பாண்டா கரடிகளைக் காண அடிலெய்டு மக்களும், ஆஸ்திரேலிய சுற்றுலா பயணிகளும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதையடுத்து, வெளிநாட்டில் இருந்து உணவு வரவழைக்கப்படும் பாண்டா கரடிகளின் சாணியை பெற்று நினைவுப் பரிசாக சிலர் வைத்துக் கொள்ளத் தொடங்கினர்.அதற்கு மவுசு அதிகரித்து விட்டது. இப்போது பாண்டாவின் ‘டூ பாத்ரூமை’ கேட்டு ஆயிரக்கணக்கானோர் அடிலெய்டு வனவிலங்கு பூங்காவுக்கு படையெடுக்கின்றனர்.

இதுபற்றி பூங்கா செயல் அதிகாரி கிறிஸ் வெஸ்ட் கூறுகையில், “பாண்டா கரடிகளின் கழிவுகளை பாக்கெட் செய்து விற்கிறோம்.இதற்காக அடிலெய்டு நகரில் 200 விற்பனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதில் கிடைக்கும் வருமானமே, சீனாவில் இருந்து உயர்ரக மூங்கில் இலைகளை வரவழைத்து கரடிகளுக்கு உணவாக அளிக்க உதவுகிறது” என்றார்.

என்ன கொடுமை சார் இது....!!

எம்.பி. பதவியை இழந்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டோம்..

மாநிலங்களவையில் இருந்து இந்த கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏழு எம்.பி.க்களில் கமல் அக்தர் (சமாஜ்வாடி) இஜாஜ் அலி (கட்சி சாராதவர்) ஆகிய இருவரும் நேற்று நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்திருந்தனர். நிருபர்களிடம் அக்தர் கூறியதாவது:

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை பெண்களுக்காகவே நாங்கள் சபையில் குரல் கொடுத்தோம். இதற்காக நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். எம்.பி. பதவியை இழந்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டோம். நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். மக்கள் கருத்தை சபையில் தெரிவிக்க எங்களுக்கு உரிமை உண்டு. உண்மையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, முஸ்லிம் பெண்களிடம் இந்த அரசாங்கம் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானம் அரசாங்கத்திடம் இருந்து தான் வந்தது. சபைத் தலைவரிடம் இருந்து வரவில்லை. இது அரசாங்கத்தின் சர்வாதிகாரம். எங்களை பலவந்தமாக வெளியேற்றி இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இஜாஸ் அலி கூறுகையில், ‘‘சபைக் காவலர்களை வைத்து எங்களை வெளியேற்றிதற்காக இந்த அரசாங்கம் தான் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அவர்கள் தவறான மசோதாவைக் கொண்டு வந்தார்கள். அதை தடுத்த காரணத்திற்காக நாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறோம். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்ப்பதில் காங்கிரஸ், பா.ஜ, இடதுசாரிகள் ஒன்று சேர்ந்திருப்பது கண்டிக்கத்தக்கது’’ என்றார்.

Wednesday, March 10, 2010

இன்னொரு முறை வலம்: பன்றிக் காய்ச்சல் பீதி நீடிப்பு...


வாஷிங்டன்: "பன்றிக் காய்ச்சல் நோய் மறைந்தாலும், அது மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்களாக பரவ வாய்ப்பு உள்ளதாக, அமெரிக்காவில் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்' என, வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

"வாஷிங்டன் போஸ்ட்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி: கடந்தாண்டு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பன்றிக் காய்ச்சல் நோய் பரவியது. ஏராளமானோர் இந்நோயின் தொற்றுக்கு ஆளாகினர்; பலர் இந்நோய்க்கு பலியானார்கள். கடுமையான சுகாதார கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பின், பன்றிக் காய்ச்சல் நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், தற்போது அந்நோய், மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்களாக பரவும் வாய்ப்பு உள்ளதாக, அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.


அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தை சேர்ந்த அன்னி சூசெட் கூறுகையில்,"நாம் முழுமையாக, அந்நோயின் பாதிப்பில் இருந்து வெளியில் வந்து விட்டோம் என கூற முடியாது. அந்நோய்க்கான எச்1என்1 வைரஸ் இன்னும் பரவிக் கொண்டு தான் உள்ளது. ஆனால், அவை எந்தளவிற்கு பெரியளவில் பரவும் என்பதை முன்னரே தெரிவிக்க முடியாது' என்றார்.

Tuesday, March 9, 2010

செக்ஸ் சாமியார் நித்யானந்தா பெண்களை கட்டியணைத்து ஆசிர்வதிப்பது ஏன்?


நித்யானந்தம் நிகழ்ச்சி நடத்தும் போது அதில் முன்வரிசையில் நடிகைகள், முக்கிய விஐபிக்களின் மனைவிகள், அவர்களது மகள்கள் அமர வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஆசிரம நிர்வாகிகளிடம் முன் அனுமதி பெற்று, அனுமதி சீட்டு பெற வேண்டும். அந்த சீட்டையும் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர்.

உபதேசம் முடிந்ததும், பக்தர்களுக்கு ஆசி வழங்குவார் நித்யானந்தா. அப்போது, ஆசி பெறும் பெண்களை தேர்வு செய்வார். அவர்களை கட்டிப் பிடித்து ஆசிர்வதிப்பார். அப்போது அந்த பெண்களின் மனநிலை எப்படி உள்ளது, கூச்சப்படுகிறார்களா, சாதாரணமாக உள்ளார்களா என்பதை வீடியோவில் பார்ப்பார். பின்னர் நிர்வாகிகள் மூலம் அவர்களை போனில் தொடர்பு கொண்டு, உங்களுக்கு பிரச்னை இருப்பதை கட்டிப் பிடிக்கும் போது பார்ப்பேன். அடிக்கடி தியானத்துக்கு வந்தால், பிரச்னைகள் தீரும் என்று கூறியுள்ளார்.

அவ்வாறு பல முக்கிய பெண்களுக்கு வலை விரித்துள்ளார். பெண்கள் அவரது அறைக்கு சென்று ஆசீர்வாதம் வாங்கும்போது யாரும் உள்ளே செல்ல மாட்டார்கள். இது அவருக்கு வசதியாகி விட்டது. அப்போது பெண்களின் மனதை தெரிந்து கொண்டு தன் வலையில் வீழ்த்தி வந்தார். இவரது வலையில் பல நடிகைகளும் வீழ்ந்துள்ளனர். அவர்களிடம் நித்யானந்தா பணம் பறித்தாரா அல்லது அவர்கள் நித்யானந்தத்திடம் பணம் பறித்தார்களா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

சென்னையில் உள்ள சில நடிகைகள் தொடர்பு பற்றியும், ஆசிரமத்துக்கு வந்த நன்கொடைகள் மற்றும் அதை அவர் முறையாக பயன்படுத்தினாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடக்கிறது. வருமான வரித் துறைக்கு முறையான தகவல்களை அளித்துள்ளாரா என்பது பற்றி விசாரணை நடத்தப்படும். அதில் தவறு நடந்திருந்தால் வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

நித்யானந்தா எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவருடைய இருப்பிடத்தை கண்டறிய பல மாநில போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை பற்றிய தகவல் தெரிய வந்தால் கைது செய்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டு, கொலை மிரட்டல் குறித்த வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டாலும், நாங்களும் விசாரணை நடத்தி அவர்களுக்கு தேவையான தகவல்களை தெரிவிப்போம்.
இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

Monday, March 8, 2010

ஹிந்து சாமியார் நித்யானந்தாவின் அனைத்து வழக்குகளும் ஒருங்கிணைக்கப்படுகிறது.


சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்பு நித்யானந்தா சாமியார் என்ற பெயரில் உலகம் முழுவதும் பிரபலமாக திகழும் ஒரு ஹிந்து ஆன்மிக வாதி பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வேண்டிய முறை பற்றி மக்களுக்கு போதிக்கும் நித்யானந்தா சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் சல்லாபமாக இருக்கும் காட்சிகள் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

நடிகை ரஞ்சிதாவும் சாமியாரும் சகஜமாக பேசிக் கொண்டு உல்லாசமாக இருப்பதை பார்க்கும்போது இது இருவருக்கும் நீண்டகாலப் தொடர்பு என்று தெரிந்தது. இந்நிலையில் நித்யானந்தா திடீரென தலைமறைவானார். இதை தொடர்ந்து சாமியார் நித்யானந்தா மீது கோவையில் பதிவான வழக்கு தொடர்பாக ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த கோவை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சாமியார் நித்யானந்தாவை கைது செய்ய வேண்டும். ஆசிரமம் உள்ளிட்ட அனைத்து சொத்துகளையும் முடக்க வேண்டும்‘ என்று கோவையைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் கோவை மாநகர போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் நித்யானந்தா மீது இந்திய தண்டனைச் சட்டம் 295 ஏ(மத உணர்வுகளை புண்படுத்துதல்), 420(மோசடி செய்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உதவி கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது:

நித்யானந்தா மீதான வழக்கு தொடர்பாக நித்யானந்தா & ரஞ்சிதா ஆபாச காட்சிகள் கொண்ட வீடியோவை ஆதாரமாகச் சேர்க்கவும், நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். ரஞ்சிதா இருக்குமிடம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றார். நித்யானந்தா மீது தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் புகார் கொடுத்து வருகின்றனர். அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் விசாரிக்க போவதாக போலீசார் தெரிவித்தனர்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா முஸ்லிம், தலித்துக்கு எதிரான சதி


லக்னோ, மார்ச் 8: மகளிர் இடஒதுக்கீடு மசோதா மூலம் முஸ்லிம்கள், தலித்துகளை நாடாளுமன்றத்துக்கு வரவிடாமல் தடுக்க சதி நடப்பதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் முலாயம் சிங் யாதவ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கு சமாஜ்வாடி கட்சி எதிரானது அல்ல. ஆனால், அந்த இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, முஸ்லிம் பெண்களுக்கும் உள் ஒதுக்கீடு வேண்டும். இப்போது உள்ள நிலையிலேயே மசோதாவை நாங்கள் ஆதரிக்க முடியாது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவால் முற்பட்ட வகுப்பினர் மட்டுமே பலனடைவர்.
மகளிர் மசோதா மூலம் முஸ்லிம்கள், தலித்துகள் ஆகியோரை நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளுக்கு வரவிடாமல் தடுக்க சதி நடக்கிறது. காங்கிரஸ், பா.ஜ. கட்சிகள் எப்போதுமே முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் எதிரானவை. எனவே, அரசியல் சட்டத்தை திருத்த விரும்புகின்றனர். குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து முஸ்லிம் எம்.பி. ஒருவர் கூட இல்லை. நிலைமை இப்படி இருக்கும்போது இடஒதுக்கீடு இல்லாமல் முஸ்லிம் பெண்கள் எப்படி நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட முடியும்?
மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஆபத்தானது. இப்போது உள்ள நிலையிலேயே மசோதா நிறைவேறினால், முஸ்லிம், தலித்துகள் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட முடியாது. அவர்களது தலைமை வளரக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறது. பெண்களை முன்னேற்ற வேண்டும் என்பதுதான் உண்மையான நோக்கமாக இருந்தால் கல்வி, வேலைவாய்ப்பில் அவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு வழங்கவில்லை.
காங்கிரஸ், பா.ஜ. கட்சி எம்.பி.க்களே மகளிர் மசோதாவுக்கு எதிராக உள்ளனர். ஆனால், கட்சித் தலைமையில் முடிவை எதிர்த்து குரல் கொடுக்க முடியாமல் அடிமைகளாக உள்ளனர். மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிப்பதற்கு பதிலாக எல்லா கட்சிகளும் தேர்தலில் 20% பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கலாம்.
இவ்வாறு முலாயம் சிங் யாதவ் கூறினார்.

லாலு எதிர்ப்பு: பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு அளித்த பேட்டியில், ‘‘பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, முஸ்லிம் பெண்களின் பிரதிநிதித்துவத்தை நசுக்கும் வகையில் மகளிர் மசோதா உள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதவை கடுமையாக எதிர்ப்போம். மகளிர் மசோதா ஒரு அரசியல் தவறு. மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இரட்டை வேடம் போடுகிறார். ஏற்கனவே, மசோதாவை எதிர்த்த இவர் இப்போது, பா.ஜ.வை திருப்திப்படுத்துவதற்காக ஆதரிக்கிறார். இந்த ஆண்டு சட்டப் பேரவைக்கு தேர்தல் வருவதை மனதில் கொண்டு பா.ஜ.வை அனுசரித்து செல்கிறார்’’ என்றார்.

Saturday, March 6, 2010

மாநிலம் தழுவிய (தமிழகம்-புதுவை) மதுக்கடை மறியல் போர் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு பிரஸ் கிளப்பில் 05.03.2010ல் நடைபெற்றது.

BANGLADESH TRAIN ACCIDENT

Heart Attacks and Drinking Warm Water

Heart Attacks and Drinking Warm Water

This is a very good article.. Not only about the warm water after your meal, but about Heart Attacks . The Chinese and Japanese drink hot tea with their meals, not cold water, maybe it is time we adopt their drinking habit while eating.

For those who like to drink cold water, this article is applicable to you.

It is nice to have a cup of cold drink after a meal.
However, the cold water will solidify the oily stuff that you have just consumed.It will slow down the digestion.Once this 'sludge' reacts with the acid, it will break down and be absorbed by the intestine faster than the solid food.It will line the intestine.
Very soon, this will turn into fats and lead to cancer & arthritis .
It is best to drink hot soup or warm water after a meal..

Common Symptoms Of Heart Attack...


A serious note about heart attacks - You should know that not every heart attack symptom is going to be the left arm hurting .

Be aware of intense pain in the jaw line .

You may never have the first chest pain during the course of a heart attack.

Nausea and intense sweating are also common symptoms.

60% of people who have a heart attack while they are asleep do not wake up.

Pain in the jaw can wake you from a sound sleep.

Let's be careful and be aware.

The more we know, the better chance we could survive.

A cardiologist says if everyone who reads this message sends it to 10 people, you can be sure that we'll save at least one life.

Read this & Send to a friend.

It could save a life.

So, please be a true friend and send this article to all your friends you care about.

I JUST DID...