மக்கள் உரிமை படியுங்கள்

Thursday, June 17, 2010

துபாயில் தலைமறைவான கீழக்கரை வாலிபர்


துபாய்: துபாயில் வேலை பார்க்க வந்த சில மாதத்திலேயே வேலை பிடிக்கவில்லை என்று கூறி விட்டு தலைமறைவான நபர், துபாயிலேயே தலைமறைவாக சுற்றிக் கொண்டிருக்கிறார். அவரை நம்பி கீழக்கரையில் வசித்து வரும் அவரது அப்பாவித் தந்தையும், தங்கையும், அந்த நபர் திரும்பி வர மாட்டாரா என்ற பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.

அவரது பெயர் எச். சுல்தான் அஹமது காசிம். 29 வயதாகிறது. துபாயில் உள்ள ஈடிஏ நிறுவனத்தில் ஒர்க்கர் பணியில் 3 வருடத்திற்கு முன்பு சேர்ந்தார். ஆனால் சில மாதங்களிலேயே அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.தனக்கு வேலை பிடிக்கவில்லை என்றும், ஊருக்குப் போகப் போவதாகவும் சக ஊழியர்களிடம் கூறியிருந்தாராம். இதை தனது தந்தைக்கும் கூறியுள்ளார். ஆனால், பெருமளவில் பணத்தை செலவு செய்து அனுப்பியுள்ளோம், அது திரும்பக் கிடைக்கும் வரையாவது வேலை பார் என்று அவரது பெற்றோர் கேட்டுக் கொண்டு துபாயிலேயே இருக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அதன் பின்னர் சுல்தான் அஹமது பெற்றோரைத் தொடர்பு கொள்ளவில்லை.

மாறாக தற்போது சோனப்பூர், அல்கூஸ், ஜபேல் அலி போன்ற கேம்புகளில் உலாவி வருவதாகவும், அஜ்மானில் உள்ள சில குதிரைக்கு புல் போடும் இடத்திலும் சுற்றி வருவதாக தகவல்கள் வருகின்றன.இவர் வீட்டிற்கு தொடர்பு கொள்வதோ, பணம் அனுப்புவதோ கிடையாது, இவரை எப்படியாவது தங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்படி துபாயில் வசிக்கும் பல பேர்களை அணுகியும் யாரும் உதவி செய்யவில்லை என்று வருத்ததுடன் இவரது தாய் தந்தையர் தெரிவிக்கிறார்கள்.

நிறுவனத்தை அணுகி விசாரித்ததில் இவரை கொண்டு வந்தால் போதும் பயணச் சீட்டு எடுத்து ஊருக்கு அனுப்பிவிடலாம் என்று தெரிவிக்கிறார்கள்.எனவே சுல்தான் அஹமதை யாரேனும் எங்காவது பார்த்தால், கீழ்க்கண்ட எண்களில் தொடர்புகொள்ளலாம்.

துபாய்- முஜிப் : 050 -8660154
பாலா- 050 -2120277

சுல்தானின் பெற்றோரைத் தொடர்பு கொள்ள:
S.ஹமீது இப்ராஹீம்
நூர்ஜஹான் எலெக்ட்ரிகல்ஸ்
கீழக்கரை
போன்: 00914567 - 244640
செல்போன்: 0091 -9382293637

நன்றி : thatstamil.com

சிங்கப்பூரில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு-பல லட்சம் பொருட்களுக்கு சேதம்



சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சிறு வியாபாரிகள் அதிகம் உள்ள பகுதியான ஆர்ச்சர்ட் சாலையில், கன மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்து, வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது.இந்த வெள்ளத்தில் வெளிநாட்டு பொருட்கள் பெருமளவில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் வழக்கமாக சிங்கப்பூரில் பெய்யும் மழையின் அளவில் 60 சதவீத அளவு, அதாவது 101 மில்லிமீட்டர் மழை ஒரே நாளில் பெய்ததால் வந்த வினை இது. இந்த பெரு மழையால் சிங்கப்பூரின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. அதில் அதிகம் பாதிக்கப்பட்டது ஆர்ச்சர்ட் சாலை வணிக வளாகங்கள்தான்.இந்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பல விலை உயர்ந்த பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக சிறு வியாபாரிகள் குமுறியுள்ளனர். தங்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள மழை நீர் வடிகால் வசதிகள் சரியில்லாததால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.கடுமையான வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் துணி விற்பனையகமான மாஸிமோ துத்தி, ஹெர்ம்ஸ் பொத்திக் ஆகியவையே.கடந்த பத்து ஆண்டுகளில் இந்த அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில்லை என்கிறார்கள் வியாபாரிகள்.

சேத மதிப்பு குறித்து முழுமையாகத் தெரியவில்லை. வெள்ளம் முழுமையாக வடிந்த பின்னர்தான் அதை மதிப்பிட முடியும் என சிங்கப்பூர் சிறு வியாபாரிகள் சங்கம் மற்றும் ஆர்ச்சர்ட் வர்த்தக சங்கம் ஆகியவை தெரிவித்துள்ளன.கன மழையில் சிக்கி பல்வேறு வணிக வளாகங்களுக்குக் கீழ் உள்ள கார் பார்க்கிங்குகளில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான கார்களும் கூட சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.