மக்கள் உரிமை படியுங்கள்

Saturday, February 27, 2010

வங்க தேசத்தில் பரிதாபம்


மேற்குவங்க மாநிலத்தில் ஸ்வெட்டர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் கருகி பலியானார்கள்.மேற்குவங்க மாநில தலைநகர் தாகாவில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள காசிப்பூரில் ஸ்வெட்டர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அங்கு 3,500 தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். நேற்று முன்தினம் பகல் நேர பணி முடிந்து பெரும்பாலான தொழிலாளர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். 50 பேர் மட்டும் இரவு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இரவு 9.10 மணி அளவில் தொழிற்சாலையின் முதல் மாடியில் தீப்பிடித்துக் கொண்டது. அது ‘மளமள‘ வென்று மற்ற மாடிகளுக்கும் பரவியது.

பணியில் இருந்தவர்கள் உயிர் தப்புவதற்காக 6&வது 7&வது மாடிகளுக்கு ஓடினார்கள். பலர் 2&வது 3&வது மாடிகளில் சிக்கி கொண்டார்கள். தகவல் அறிந்து 7 தீயணைப்பு வண்டிகளும் 3 ஆம்புலன்சுகளும் விரைந்து வந்தன. தீயில் கருகி காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு மருத்துவமனைகளில் சேர்ந்தனர். அவர்களில் 15 பெண்கள் உட்பட 21 பேர் இறந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தொழிற்சாலையிலும் மருத்துவ மனைகளிலும் திரண்டு நின்று கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.மின்சார கசிவே தீ விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வங்கி தொடக்கம்!


ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய வங்கியும், வட்டியில்லா வங்கி சேவையில் தனது ஈடு பாட்டை தொடங்கியுள்ளது. இத்தகவலை ஆஸ்திரேலி யாவின் வெஸ்ட்பேக் கார்பரேஷன் பைனான்சியல் அன்ட் டிரேடின் தலைவர் இம்மானுவேல் அல் ஃபய்ரீஸ் தெரிவித்தார்.

முதலீட்டாளர்களுக்காக வங்கி தனது வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.தங்களது முதலீடு எந்தவகை யில் பயன்படுத்தப்படுகிறது என் பதை முழுமையாக அறியும் உரிமை முதலீட்டாளர்களுக்கு உண்டு.

மூன்று லட்சத்து 65 ஆயிரம் முஸ்லிம்கள் வாழும் ஆஸ்திரேலியா வில் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் வட்டியில்லா வங்கி மிகுந்த பயனுடையதாக இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இஸ்லாமிய வங்கி ஆஸ்திரேலியாவின் வங்கியியலில் ஒரு அம்சமாக விளங்கும் என ஆஸ்திரேலிய வணிக அமைச்சர் சைமன் கிரியேன் தெரிவித்தார்.

Monday, February 22, 2010

கிழக்கிந்தியக் கம்பெனி : விலை கொடுத்து வாங்கினார் ஒரு இந்தியர்


லண்டன் : இந்தியாவை நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆண்ட "கிழக்கிந்திய கம்பெனி' யை இப்போது ஒரு இந்தியர் வாங்கியுள்ளார். கி.பி., 1600ல் பிரிட்டனில் பலதரப்பட்ட வியாபாரிகள் சேர்ந்து, வெளிநாடுகளில் பல்வேறு பொருட்களை வியாபாரம் செய்து தம்நாட்டுக்கு செல்வத்தைச் சேர்ப்பதற்காக துவங்கப்பட்டதுதான் கிழக்கிந்தியக் கம்பெனி. இதை அப்போதைய பிரிட்டன் ராணி எலிசபெத் -1 அங்கீகரித்தார். பின் அந்தக் கம்பெனி, இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் கால்பதித்து வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தது. அத்துடன் பிரிட்டன் அரசைப் போல் தனக்கான ராணுவம், கப்பல்கள், கணக்கற்ற ஊழியர்கள், இந்தியாவில் உயர்ந்த பதவிகள், பணம் போன்றவற்றைக் கொண்ட ஆலமரமாக வளர்ந்தது.


கடந்த 1857ல் நடந்த முதல் இந்திய சுதந்திரப் போரையடுத்து கிலியடைந்த பிரிட்டன், இந்திய நிர்வாகத்தை கம்பெனியிடமிருந்து பறித்து விக்டோரியா ராணியின் நேரடிப் பார்வையில் கொண்டு வந்தது. பின், அதையே காரணம் காட்டி, 1874ல் கம்பெனியை தேசிய மயமாக்கியது. கம்பெனியின் முக்கிய வர்த்தகம், டீ, காபி மற்றும் ஆடம்பரப் பொருட்களை ஐரோப்பிய நாடுகளில் கொள்முதல் செய்து உலகம் முழுவதும் விற்பதுதான். இந்தியாவை செருக்குடன் கட்டியாண்ட அந்தக் கம்பெனி இப்போது ஒரு இந்தியர் கையில். ஆம்... மும்பையைச் சேர்ந்த சஞ்சீவ் மேத்தா என்ற இளம் தொழிலதிபர், அந்தக் கம்பெனியை நிர்வகித்து வந்த 40 பங்குதாரர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கி விட்டார். அந்தக் கம்பெனியில் 240 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்து, அதன் முதல் லண்டன் கிளையை மார்ச் மாதத்தில் திறக்க இருக்கிறார். "ஒரு இந்தியனாக என் நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்; இந்தக் கம்பெனியை நான் வாங்கிய போது என்னுள் எழுந்த உணர்ச்சிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது ' என்று உணர்ச்சிவயப்பட்டார் சஞ்சீவ் மேத்தா.

ஹமாஸ் தலைவர் கொலை பின்னணியில் இஸ்ரேலிய பிரதமர் தீவிரவாதி நெதன்யாகு.

துபாயில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரின் படுகொலைக்கு தீவிரவாத இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு அனுமதியளித்தான் என டைம்ஸ் ஆன்லைன் என்ற பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து ஹமாஸின் ராணுவப்பிரிவான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாமின் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் மப்ஹூஹ் கொல்லப்பட்டிருந்தார். அவரைக் கொன்ற கொலையாளிகளை பற்றி துபாய் போலீஸ் தீவிரவமாக விசாரித்து கண்டறிந்தது. இதற்கு க்ளோஸ் சர்க்யூட் டிவியில் பதிவான காட்சிகள் குற்றவாளிகளை அடையாளம் காண உதவின. இக்குற்றவாளிகள் அனைவரும் ஐரோப்பிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகளில் பயணம் செய்துள்ளனர்.

ஆனால் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கொலையாளிகள் தங்கள் நாட்டைச்சார்ந்தவர்களில்லை என்று உறுதிப்படக் கூறின. மேலும் இவர்கள் மொஸாத் என்ற இஸ்ரேலிய தீவிரவாத உளவு அமைப்பைச் சார்ந்தவர்கள் என்றும் குற்றஞ்சாட்டின.

துபாய் போலீஸும் குற்றவாளிகள் தீவிரவாத மொஸாதைச் சார்ந்தவர்களென்றும் மொஸாதின் தலைவரைக் கைதுச் செய்யவேண்டுமென்றும் கோரியது. ஆனாலும் தீவிரவாத இஸ்ரேல் இதுபற்றி இதுவரை வாய்திறக்கவில்லை. இந்நிலையில் டைம்ஸ் ஆன்லைன் என்ற பத்திரிகை இதுபற்றிக் கூறுகையில், இஸ்ரேலிய பிரதமர் தீவிரவாதி நெதன்யாகு கடந்த ஜனவரி மாத துவக்கத்தில் கொலைச் செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலை மொஸாதின் தலைவர் மெய்ர் தகானைச் சந்தித்து அளித்தார் என மொஸாத் வட்டாரத்தைச் சார்ந்த சிலர் தெரிவித்துள்ளனர்.

மஹ்மூத் அல் மப்ஹூஹ் உள்ளிட்ட சிலரைக் கொல்வதற்கான ஆபரேசனை நிறைவேற்ற இறுதி ஒப்புதல் அளித்தார் என மொஸாத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மப்ஹூஹை கொல்வதற்கு முன்னால் டெல் அவீவில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து ஒத்திகை பார்த்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Thursday, February 18, 2010

இரானுக்கு எதிரான நடவடிக்கையில் ஒத்துழைக்க சவுதிஅரேபியா மறுப்பு.


ஈரானுக்கெதிராக மீண்டும் தடை ஏற்படுத்த சீனாவை இணங்கச் செய்ய வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சவூதி அரேபியா மறுத்துள்ளது.

ஈரான் விவகாரத்தில் என்ன செய்யவேண்டும் என்பது சீனா அதிகாரிகளுக்கு சவூதி அரேபியா சொல்லிக் கொடுக்க வேண்டிய சூழல் இல்லை என சவூதிஅரேபியா வெளியுறவுத்துறை அமைச்சரும் இளவரசருமான ஸவூத் அல் ஃபைஸல் தெரிவித்தார்.

தோஹாவில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் அவர். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரமுள்ள நாடு என்ற முறையில் சீனா அவர்களுடைய பொறுப்பை நிர்வகிப்பார்கள். தடை என்பது நீண்டகால பரிகாரமாகும். இதற்கு பதில் உறுதியானதும், அதிக காலம் நீளாத நடவடிக்கைகளும் தான் மேற்க்கொள்ள வேண்டும். இப்பகுதியின் பாதுகாப்பிற்கு ஈரானில் சமாதானமும், மகிழ்ச்சியும் நிலைநிற்க வேண்டும் என ஃபைஸல் தெளிவுப்படுத்தினார்.

அணுசக்தி திட்டத்தின் பெயரால் ஈரானுக்கெதிராக நடவடிக்கை மேற்க்கொள்ள கோரும் அமெரிக்கா அரபு நாடுகளின் ஆதரவிற்காக ஹிலாரியை சுற்றுப் பயணத்திற்கு அனுப்பியுள்ளது.

ஈரான் விவகாரத்தில் ராஜதந்திர நடவடிக்கைகள் வேண்டும் என்று கோரும் சீனா அமெரிக்காவின் ஒருதலை பட்சமான நடவடிக்கைகளை எதிர்க்கும் நாடாகும். ஈரானுக்கெதிராக மூன்று தடைகள் தற்போது உள்ளன. நான்காவது தடையை ஏற்படுத்துவதற்குதான் அமெரிக்காவும் கூட்டணி நாடுகளும் முயற்சிச்செய்துவருகின்றன.

Monday, February 15, 2010

டாக்டர்.ஜாஹிர் நாயக் 2010 ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த 100 இந்தியர்களில் ஒருவராக தேர்வு


புதுடெல்லி:பிரபல இஸ்லாமிய பிரச்சாரகர் டாக்டர்.ஜாஹிர் நாயக் பிரபல நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள 2010 ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த 100 இந்தியர்களில் ஒருவராக தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்தப் பட்டியலில் 7 முஸ்லிம்களும் இடம் பிடித்துள்ளனர். டாக்டர் ஜாஹிர் நாயக் 89 வது இடத்தை பிடித்துள்ளார்..ஆனால் இந்துமத குருவாக கருதப்படும் பாபா ராம்தேவிற்கு 99-வது இடமும், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு 100-வது இடமுமே கிடைத்துள்ளது.

இந்தப்பட்டியல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரசின் துணை ஏடான சண்டே எக்ஸ்பிரஸ் இதழில் வெளியிடப்படுள்ளது.

இதர முஸ்லிம்கள் பிடித்துள்ள தரவரிசை வருமாறு:காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அஹ்மத் பட்டேல்(10-வது இடம்). ஏ.ஆர்.ரஹ்மான்(31-வது இடம்), அமீர்கான்(39-வது இடம்), ஷாருக்கான்(47-வது இடம்), உமர் அப்துல்லாஹ்(57-வது இடம்), அஸீம் பிரேம்ஜி(60-வது இடம்). 100 சக்தி வாய்ந்த இந்தியர்களின் பட்டியலில் 89-வது இடத்தைப் பெற்றிருக்கும் ஜாஹிர் நாயக்கிற்கு 44-வயது ஆகிறது. 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட
ஆன்மீக தலைவர்கள் பட்டியலில் டாக்டர் ஜாஹிர் நாயக் பாபா ராம்தேவ் மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு அடுத்தப்படியாக 3-வது இடத்தை பிடித்திருந்தார். ஆனால் 2010 ஆம் ஆண்டில் அவர்கள் இருவரையும் முந்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ஜாஹிர் நாயக் சமீபத்தில் வெளியான உலகை அதிகம் ஈர்த்த 500 முஸ்லிம்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை அமெரிக்காவிலிலுள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

டாக்டர் ஜாஹிர் நாயக்கைப் பற்றி சண்டே எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள சுருக்கமான அறிமுகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறது. "சூட் கோட்டை அணிந்து ஆங்கிலத்தில் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும் இவாஞ்சலிஸ்ட் ஜாஹிர் நாயக் சக்தி வாய்ந்த பேச்சாளர். இவரது உரையை இவர் நிறுவியுள்ள Peace TV யின் வாயிலாக 125 நாடுகளைச்சார்ந்த 100 மில்லியன் மக்கள் பார்க்கின்றார்கள். கடந்த ஆண்டு வட
அமெரிக்காவிலும் Peace TV தனது ஒளிபரப்பை துவங்கியது.. இவ்வலைவரிசையின் உருது சானலை 50 மில்லியன் மக்கள் பார்க்கின்றார்கள்.

கடந்த 14 ஆண்டுகளில் இவர் 1300 பொதுநிகழ்ச்சிகளில் உரை நிகழ்த்தியுள்ளார். இதில் 100 உரைகள் கடந்த 2009 ஆம் ஆண்டிலாகும். கடந்த ஆண்டு நவம்பரில் மும்பையில் நடைபெற்ற Peace Conference இல் 10 லட்சம் மக்கள் கலந்துக்கொண்டனர்.. டாக்டர் ஜாஹிர் நாயக்கின் உரையை மட்டும் கேட்க 2 லட்சம் மக்கள் கூடினர். இதில் மலேசியாவின் முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹீமும் உட்படுவார். இந்த ஆண்டு டிசம்பரில்
Peace TV பெங்காளி மொழியில் அலைவரிசையைத் துவக்குகிறது. செய்திச்சானல்களை 2012 அல்லது 2013 ஆண்டுல் துவக்கும்.

Wednesday, February 10, 2010

LAPTOP TIPS AND TRICKS


Thermal dissipation - Laptop cooling
Never use your laptop directly on a surface that prevents proper air flow, such as inside the laptop case, on a blanket or pillow. Periodically check that vents are not obstructed. Use a mobile cooling pad if necessary.

Battery charge - Laptop autonomy
Discharge completely your battery at least once per month.

Security - Laptop tracking
Use the CyberAngel security solution to track your laptop in case it is stolen.

Viruses
It is not enough to have an antivirus program installed. It needs to be kept up-to-date, and we recommend to update it at least once per week.

Windows Updates
Make sure that your computer downloads Window Updates periodically and frequently. This will enhance stability and security of your operating system.

Carrying
Always use an appropriate carrying bag when traveling, to enhance shock absorption. Whenever you need to ship your laptop through a carrier (SUPS, FedEx, UPS, etc...), always use packaging specifically designed for laptops transit.

Shocks
Because of they are designed to maximize mobility, laptops are prone to shocks. Always turn your laptop OFF before you move your notebook from a place to another, unless it is well stabilized on a stand that is designed to absorb shocks.

Humidity
Laptops are very sensitive to humidity. Avoid liquid exposure as much as you can (water, wine, etc...).

Dust
Laptops are very sensitive to dust. Make sure the laptop is never left on a floor, but that it is always high on a table, desk, stand, etc... Check vents frequently to see if they are not obstructed.

Preventing Laptop Computer Theft

Laptop computers are easy targets for thieves. Laptop computers are small, valuable, can be removed quickly, and are easily hidden. Laptop computers can be worth up to $5000 or more. The laptop computer can be pawned at a pawnshop for half its value.

Here are a few tips to reduce the risk of having your laptop stolen.

* Don’t leave your laptop out in the open even for a second.
* Remember extreme temperatures can cause damage to your laptop.
* Transport your laptop in a nondescript case.
* Write down the serial number and keep it in a safe place.
* Always back up your information on disks and store them in a safe place.

KEYBOARD SHORTCUTS FOR WINDOWS


1. Shift + F10 right-clicks.
2. Win + L (XP Only): Locks keyboard. Similar to Lock Workstation.
3. Win + F or F3: Open Find dialog. (All Files) F3 may not work in some applications which use F3 for their own find dialogs.
4. Win + Control + F: Open Find dialog. (Computers)
5. Win + U: Open Utility Manager.
6. Win + F1: Open Windows help.
7. Win + Pause: Open System Properties dialog.
8. Win + Tab: Cycle through taskbar buttons. Enter clicks, AppsKey or Shift + F10 right-clicks.
9. Win + Shift + Tab: Cycle through taskbar buttons in reverse.
10. Alt + Tab: Display Cool Switch. More commonly known as the AltTab dialog.
11. Alt + Shift + Tab: Display Cool Switch; go in reverse.
12. Alt + Escape: Send active window to the bottom of the z-order.
13. Alt + Shift + Escape: Activate the window at the bottom of the z-order.
14. Alt + F4: Close active window; or, if all windows are closed, open shutdown dialog.
15. Shift while a CD is loading: Bypass AutoPlay.
16. Shift while login: Bypass startup folder. Only those applications will be ignored which are in the startup folder, not those started from the registry (Microsoft\Windows\CurrentVersion\Run\)
17. Ctrl + Alt + Delete or Ctrl + Alt + NumpadDel (Both NumLock states): Invoke the Task Manager or NT Security dialog.
18. Ctrl + Shift + Escape (2000/XP ) or (Ctrl + Alt + NumpadDot) : Invoke the task manager. On earlier OSes, acts like Ctrl + Escape.
19. Print screen: Copy screenshot of current screen to clipboard.
20. Alt + Print screen: Copy screenshot of current active window to clipboard.
21. Ctrl + Alt + Down Arrow: Invert screen. Untested on OS's other than XP.
22. Ctrl + Alt + Up Arrow: Undo inversion.
23. Win + B : Move focus to systray icons.

Increase your RAM and so system speed


1). Start any application, say Word. Open some large documents.

2). Press CTRL+SHIFT+ESC to open Windows Task Manager and click Processes tab and sort the list in descending order on Mem Usage. You will notice that WINWORD.EXE will be somewhere at the top, using multiple MBs of memory.

3). Now switch to Word and simply minimize it. (Don't use the Minimize All Windows option of the task bar).

4). Now go back to the Windows Task Manager and see where WINWORD.EXE is listed. Most probably you will not find it at the top. You will typically have to scroll to the bottom of the list to find Word. Now check out the amount of RAM it is using. Surprised? The memory utilization has reduced by a huge amount.

5). Minimize each application that you are currently not working on by clicking on the Minimize button & you can increase the amount of available RAM by a substantial margin. Depending upon the number and type of applications you use together, the difference can be as much as 50 percent of extra RAM.

In any multitasking system, minimizing an application means that it won't be utilized by the user right now. Therefore, the OS automatically makes the application use virtual memory & keeps bare minimum amounts of the code in physical RAM.

துபாய் 'பர்ஜ் கலிபா'வில் மின்சார கோளாறு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு


துபாய்:உலகின் மிக உயரமான கட்டடமான துபாய், "பர்ஜ் கலிபா'வில், மின்சார கோளாறு மற்றும் பராமரிப்புப் பணி காரணமாக, பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.துபாயில் உள்ள, "பர்ஜ் கலிபா' கட்டடம், இரண்டு மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. உலகிலேயே மிக உயரமான கட்டடம் இது தான். 828 மீட்டர் உயரமுடைய இக்கட்டடத்தில், 160 தளங்கள் உள்ளன.இது பாலைவன அதிசயமாக கருதப்படுகிறது.

துபாயைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் இந்த கட்டடத்தை காண்பதற்காக அதிகளவு வரத் துவங்கியுள்ளனர்.இதனால், சர்வதேச அளவில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடமாக, "பர்ஜ் கலிபா' கருதப்படுகிறது.கட்டடத்தின் 124வது தளம், பார்வையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் இருந்தவாறு, துபாய் நகரத்தின் அழகை, பார்வையாளர்கள் ரசிக்கலாம். இதற்காக நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு 1,250 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

இன்டர்நெட் மூலமும், முன்பதிவு செய்யப்படுகிறது.சமீபத்தில் இந்த தளம் திடீரென மூடப்பட்டது. பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு, டிக்கெட்டுக்கான நுழைவுக் கட்டணம் திருப்பிச் செலுத்தப்பட்டது. இதனால், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


பார்வையாளர் மாடம் மூடப்பட்டதற்கான காரணம் தெரியாமல், சுற்றுலா பயணிகள் குழம்பிப் போயினர். பின்னர் கட்டடத்துக்கு சொந்தமான, "எம்மார்' நிறுவனம் இதுகுறித்து சிறிய அறிவிப்பை வெளியிட்டது.அதில்,"கூட்டம் அதிகமாக இருந்ததால், பார்வையாளர் மாடத்துக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து மூடியிருந்ததால், குழப்பம் மேலும் அதிகரித்தது.பின்னர், "மின்சார பிரச்னை காரணமாக பார்வையாளர் மாடம் மூடப்பட்டுள்ளது' என, அறிவிக்கப்பட்டது.

பார்வையாளர் மாடம், மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற விவரமும் வெளியிடப்பட வில்லை. இந்த கட்டடத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "மின்சார பிரச்னை காரணமாகவும், பராமரிப்பு பணிகளுக்காகவும், பார்வையாளர் மாடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மீண்டும் செயல்படத் துவங்கும்போது, அதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படும்' என்றார்.இச்சம்பவம் "பர்ஜ் கலிபா'வின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

Tuesday, February 9, 2010

இலங்கை ராணுவ மாஜி தளபதி சரத் பொன்சேகா திடீர் கைது


கொழும்பு: இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா நேற்றிரவு கைது செய்யப்பட்டார். ராணுவ போலீசார் அவரை கைது செய்தனர். இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், ராஜபக்ஷேயை எதிர்த்துப் போட்டியிட்டவர் அந்நாட்டு ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா. இவர் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார்.

கடந்த மாதம் 27ம் தேதி, அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த போது, கொழும்பில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த பொன்சேகா, தனது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து இலங்கை அதிபர் ராஜபக்ஷேவையும், அவரது குடும்பத்தினரையும் தீர்த்துக் கட்டுவதற்கு, சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அவரை ரகசிய இடம் ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், அங்கு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் வேலை பார்க்க விசா தருவதில் அதிக கட்டுப்பாடு


மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் தங்கி வேலை பார்ப்பதற்கான விசா வழங்குவதற்கான நிபந்தனைகளை, அந்நாட்டு அரசு அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் உள்ளனர். சமீப காலமாக, இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. மாணவர்கள் விசாவில் வந்த பலர், பகுதி நேரமாக வேலை செய்கின்றனர். இன்னும் சிலர், ஆஸ்திரேலியாவுக்கு வந்து சமையல் கலை, சிகையலங்கார படிப்புகளை படித்து விட்டு, இங்கேயே வேலை தேடி நிரந்தரமாக தங்க விரும்புகின்றனர்.

இந்த முறையில் ஏராளமான வெளிநாட்டு இளைஞர்கள், ஆஸ்திரேலியாவில் தங்கி வேலை பார்ப்பதற்கான விசாவுக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், சமையல்காரர், சிகையலங்காரம் தொழில் செய்வதற்காக விண்ணப்பித்த 20 ஆயிரம் பேரின் விசா விண்ணப்பத்தை, ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சகம் நிராகரித்துவிட்டது. இது குறித்து குடியேற்றத்துறை அமைச்சர் கிறிஸ் ஈவான்ஸ் குறிப்பிடுகையில், "சிகையலங்காரம், சமையல் கலை போன்ற துறைகளில் விண்ணப்பித்து விட்டு, சில கல்வி நிலையங்களைஆரம்பித்து ஏராளமான மாணவர்களை ஏமாற்றுகின்றனர். இதற்காக இந்த துறைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு விசா வழங்கவில்லை. மாறாக நர்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆசிரியர், டாக்டர் போன்ற வேலைக்கு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டுள்ளோம்' என்றார்.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதை தவிர்க்க, அவர்கள் ஏழைகளை போல தோற்றமளிக்க வேண்டுமென, விக்டோரியா மாநில போலீஸ் அதிகாரி தெரிவித்திருந்தார். இதற்கு மாணவர் சங்கங்களும், பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அர்த்தமில்லாமல் தேவையற்ற வகையில், விஷயத்திற்கே சம்பந்தமில்லாத வகையில் கூறப்பட்ட கருத்து என்று இந்த அமைப்புகள் குறை கூறியுள்ளன.

சிறுபான்மையினர் முன்னேற்றம் உறுதியான நடவடிக்கை தேவை - காங்கிரஸ்


புதுடெல்லி, பிப்.9:சிறுபான்மை மக்கள் முன்னேற்றத்துக்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.ஆந்திராவில் அரசு பணிகளில் முஸ்லிம்களுக்கு பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் 4 சதவீதம் அளிக்க அந்த மாநில அரசு இயற்றிய சட்டம் செல்லாது என்று ஆந்திர உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதே நேரத்தில், மேற்கு வங்கத்தில் அரசு வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா அறிவித்துள்ளார்.

இந்த நிலவரம் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி டெல்லியில் நேற்று கூறியதாவது:சிறுபான்மை மக்களை தேசிய வளர்ச்சியில் ஒருங்கிணைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் ஆதரிக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை கறுப்பு, வெள்ளை என்ற கோணத்தில் பார்க்க கூடாது. இந்தப் பிரச்னையிலும், ஆந்திர உயர் நீதிமன்றத்தின் முடிவிலும் பல்வேறு விஷயங்கள் அடங்கியுள்ளன.இவ்வாறு திவாரி கூறினார்.

மேற்கு வங்க அரசு பணியில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு


மேற்கு வங்கத்தில் அரசு பணிகளில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா அறிவித்துள்ளார்.இது குறித்து கொல்கத்தாவில் புத்ததேவ் பட்டாச்சார்யா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
முஸ்லிம்களுக்கு அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான கமிஷன் கடந்த ஆண்டு மத்திய அரசிடம் அறிக்கை அளித் தது.
இதில் மத்திய அரசின் முடிவுக்கு காத்திருக்காமல் அறிக்கையை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மேற்கு வங்கத்தில் சமூக, கல்வி, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு அரசு பணிகளில் 10% இடஒதுக்கீடு அளிக்கப்படும்.
சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் முஸ்லிம்களை அடையாளம் காணும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஏற்கனவே 7% இடஒதுக்கீடு உள்ளது. பின்தங்கிய நிலையில் இருக்கும் முஸ்லிம்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் இவ்வாறு புத்ததேவ் பட்டாச்சார்யா கூறினார்.
இடதுசாரி முன்னணி தலைவர் பிமன் போஸ் கூறுகையில்,"மத அடிப்படையில் இல்லாமல் சமூக, கல்வி, பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தேவைப்படுகிறது" என்றார்.கொல்கத்தா மாநகராட்சிக்கு மே மாதம் தேர்தல் நடக்க உள்ளது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இது முன்னோட்டமாக கருதப்படும் நிலையில்,முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

"மாஷாஅல்லாஹ்"

Monday, February 8, 2010

நடுவானில் விமானங்கள் மோதல் அமெரிக்காவில் மூன்று பேர் பலி


நியூயார்க்:அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாயினர்.அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் பவுல்டர் விமான நிலையத்திலிருந்து ஒரு இருக்கை கொண்ட விமானம், மூன்று பயணிகளை கொண்ட கிளைடர் விமானத்தை இழுத்து கொண்டு நேற்று முன்தினம் பறந்தது.

பவுல்டர் நகரத்தின் வடக்கு பகுதியில் இந்த விமானங்கள் சென்று கொண்டிருந்த போது, நான்கு இருக்கைகள் கொண்ட விமானம் திடீரென வந்து ஒரு இருக்கை கொண்ட விமானத்தின் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் ஒரு இருக்கை மற்றும் நான்கு இருக்கைகள் கொண்ட விமானங்கள் வெடித்து சிதறின.இந்த விபத்தில் மூன்று பேர் பலியாயினர். கிளைடர் விமானத்தில் இருந்த பைலட்டும், ஒரு பெண் பயணியும் அவரது குழந்தையும் பாரசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கி விட்டனர்.இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு முன்னதாகவே சதாம் உசேனை அகற்ற பிரிட்டன் ரகசிய திட்டம்: புதிய தகவலால் பரபரப்பு


லண்டன்:அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு முன்னதாகவே, அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேனை பதவியில் இருந்து அகற்றுவதற்கு, பிரிட்டன் ரகசிய திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது கடந்த 2001 செப்டம்பரில் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர்.

இதில், அந்த கட்டடம் தரை மட்டமாகியது. இதைத் தொடர்ந்து, ஈராக் மீது அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் தாக்குதல் நடத்தின. தலைமறைவான அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேனை, அமெரிக்க ராணுவம் கைது செய்தது. இதையடுத்து, அவர் மீது ஈராக் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, தூக்கில் போடப்பட்டார்.

ஆனால், அமெரிக்க உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு முன்னதாகவே, ஈராக் அதிபர் பதவியில் இருந்து சதாம் உசேனை அகற்றுவதற்கு பிரிட்டன் அரசு ரகசிய திட்டமிட்டதும், இது தொடர்பாக ஈராக்கில் உள்ள சதாம் எதிர்ப்பாளர்களுடன் ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டதும் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த உடன்படிக்கையின் நகல் ஒன்று தற்போது கைப்பற்றப்பட்டு, வெளி உலகிற்கு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேருக்கும், சதாம் உசேன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே இந்த உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஈராக் நாட்டுக்கும், மக்களுக்கும் பிரிட்டன் எப்போதும் ஆதரவாக இருக்கும். ஈராக் மக்களுடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் தயாராக உள்ளது. ஈராக் மக்களின் உரிமைகளை காக்கவும், அங்கு நிரந்தர அமைதி ஏற்படவும், அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை ஏற்படுத்துவதற்கும் பிரிட்டன் உதவும். அடக்கு முறையில் இருந்தும், அநியாயமாக கைது செய்யப்படுவதில் இருந்தும் ஈராக் மக்களை காப்போம். இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறி, சதாம் உசேன் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டால், ஈராக்குடன் எண்ணெய் கிணறு தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளப்படும்.

ஈராக் சார்பில் வாங்கப்பட்ட கடன் ரத்து செய்யப்படும். வர்த்தக உடன்படிக்கைகளும் மேற்கொள்ளப்படும். உலக வங்கி, சர்வதேச நிதியகம், ஐரோப்பியயூனியன் ஆகியவற்றிடம் இருந்து நிதி உதவி பெற்றுத் தரப்படும்.இவ்வாறு அந்த ஒப்பந்ததில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டோனி பிளேர் தற்போது கூறுகையில், "அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பின்னரே, சதாம் உசேனை ஆட்சியில் இருந்து அகற்றும் விஷயத்தில் கவனம் செலுத்தப்பட்டது' என்றார்.இந்த விவகாரம் பிரிட்டனில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thursday, February 4, 2010

இன்டர்நெட் ஸ்பீடு கொரியா முதலிடம்


தென்கொரியா, ஹாங்காங், ஜப்பான் ஆகிய கிழக்கு ஆசிய நாடுகள், அதிவேக இன்டர்நெட் சேவையில் முன்னிலை வகிக்கின்றன.
இதை உலகம் முழுவதும் நடந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. உலகின் அதிகபட்ச இன்டர்நெட் இணைப்பு சராசரி வேகத்தில் தென்கொரியா முதலிடம் வகிக்கிறது. அங்கு இன்டர்நெட் வேகம் விநாடிக்கு 14.6 மெகாபைட்ஸ். ஆசியாவின் 10 நகரங்களுடன் அது விநாடிக்கு 15 மெகாபைட்ஸ் வேகம் கொண்டுள்ளது.
இரண்டாவது இடம் வகிக்கிறது ஜப்பான். அங்கு சராசரி இன்டர்நெட் இணைப்பு வேகம் விநாடிக்கு 7.9 மெகாபைட்ஸ். சீனப் பகுதியான ஹாங்காங்கில் விநாடிக்கு 7.6 மெகாபைட்ஸ் வேகத்துடன் இன்டர்நெட் சேவை கிடைக்கி றது. அதன்மூலம் ஹாங்காங் மூன்றாம் இடத்தில் உள்ளது.
பிராட்பேண்ட் இன்டர்நெட் வேகம் அதிகமுள்ள மற்ற நாடுகள் பட்டியலும் ஆய்வில் வெளியிடப்பட்டது. ரோமானியா, சுவீடன், அயர்லாந்து, ஹாலந்து, சுவிட்சர்லாந்து, டென்மார்க், செக் குடியரசு ஆகியவை அதில் இடம்பெற்றுள்ளன. பட்டியலில் அமெரிக்கா 18வது இடத்தில் உள்ளது.

பேசும் படம்


குஜராத்தில் இந்த ஆண்டு மிளகாய் சாகுபடி அமோகமாக உள்ளது. அகமதாபாத்தை அடுத்த ஷெர்தா கிராமத்தில் மிளகாய்களை தரம் பிரிக்கும் பணியில் "குழந்தை தொழிலாளர்கள்"

Wednesday, February 3, 2010

ஒளுச் செய்ய உதவி செய்யும் நவீன கருவி கண்டுபிடிப்பு.


முஸ்லிம்கள் தொழுகைக்காக தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் ஒளுச் செய்ய அவர்களுக்கு உதவி செய்யும் நவீன கருவியொன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

குறைந்த அளவே தண்ணீரைப் பயன்படுத்தி ஒளுச் செய்ய இது உதவும் என்று இதைக் கண்டுபிடித்த மலேசிய நிறுவனம் AACE டெக்னாலஜீஸ் தெரிவித்துள்ளது.

இந்தப் பச்சை நிற உபகரணத்தில் தொட்டியுடன் தானியங்கி உணர்விகள் (Automatic Sensors) உள்ளனவாம். மேலும், ஒளுவின் போது, குர்ஆனிலிருந்து பிரார்த்தனை வசனங்களையும் இது ஒலித்தவண்ணம் இருக்குமாம்.

"வருங்காலங்களில் நீர் வீணடிப்பைத் தடுப்பதும், நீரைச் சேமிப்பதும் இன்றியமையாததாக இருக்கும் இந்தக் கருவியின் மாதிரி செயற்பாட்டை கோலாலம்பூரில் நிகழ்த்திக் காட்டப்பட்டது.

ஆறுமாத காலங்களில் சந்தைக்கு வர இருக்கும் இந்தக் கருவி தொடக்கத்தில் 3000 முதல் 4000 அமெரிக்க டாலர்கள் வரை விலை வைக்கப்பட்டுள்ளதாம்.

கடந்த ஹஜ்ஜின் போது, ஏறத்தாழ இருபது இலட்சம் மக்கள் ஒளுச் செய்ய, தினமும், சுமார் 50 இலட்சம் லிட்டர்கள் நீர் பயன்படுத்தபட்டுள்ளது. இந்த உபகரணத்தால் அதில் 40 இலட்சம் லிட்டரை, தினமும் மிச்சப்படுத்த முடியும்.

துபாய் விமானநிலையத்தில், விரைவில், இந்தக் கருவிகளை நிறுவ உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஏவுகணை திட்டத்திற்கு இரான் கண்டனம்


ஏவுகணை தாக்குதலுக்கு எதிரான புதிய தற்காப்பு கட்டமைப்பு ஒன்றை வளைகுடா பிராந்தியத்தில் நிறுவுவதற்கான அமெரிக்க திட்டத்திற்கு இரான் கடுமையாக எதிர்பு தெரிவித்திருக்கிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இரான் எதிர்ப்பு நிலையை உருவாக்க அமெரிக்கா முயல்வதாக இரானின் வெளியுறவுத் துறையின் பேச்சாளர் குற்றம் சாட்டினார்.

இரான் தனது அண்டை நாடுகளுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலையும் உருவாக்கவில்லை என்று இரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லாடிஜானி அவர்கள் தெரிவித்தார்.

இரான் அல்லது வடகொரியா தயாரிக்கக்கூடும் என்று கருதப்படும் தொலைதூரம் சென்று தாக்கவல்ல ஏவுக ணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கவல்ல ராக்கெட்டுகளை அமெரிக்கா நேற்று திங்கட்கிழமை பரிசோதித்தது.

சிகரெட் வெடித்ததில் 6 பற்கள் உடைந்தன..!!



இந்தோனேசியாவில் திடீரென சிகரெட் வெடித்ததில் அதைப் புகைத்தவரின் 6 பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. வாயில் 51 தையல்கள் போடப்பட்டன.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்தா புறநகரான பெகாசியில் வசிப்பவர் ஆன்டே சுசான்டோ. வயது 31. சிகரெட் புகைத்தபடி பைக்கில் இவர் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென சிகரெட் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
அதில் ஆன்டேவின் வாயில் படுகாயம் ஏற்பட்டு 6 பற்கள் உடைந்தன. வாய்க்குள் சதை கிழிந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஆன்டேவுக்கு வாயில் 51 தையல்கள் போடப்பட்டன.
இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘எனது பள்ளிப் பருவத்தில் இருந்து புகைத்து வந்தேன். இதுவரை இப்படி ஆனதில்லை. சிகரெட் வெடிக்கும் என எதிர்பார்க்க வில்லை. அந்த அதிர்ச்சியால் இனி புகைப்பதை நிறுத்த முயற்சி செய்வேன்’’ என்றார்.
சிகரெட் வெடித்து படுகாயம் ஏற்படுத்தியதால் அதைத் தயாரித்த நோஜோரனோ புகையிலை நிறுவனம் மீது இழப்பீடு கேட்டு வழக்கு தொடர ஆன்டேவின் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதுபற்றி அந்நிறுவன தரப்பில் கூறுகையில், ‘‘எங்கள் சிகரெட்டில் வெடிபொருள் ஏதும் கிடையாது. தவறுதலாக சேர்ந்திருக்கவும் வாய்ப்பில்லை’’ என்றனர்.

Tuesday, February 2, 2010

சிவசேனை மீது ராகுல் கடும் தாக்கு


தமக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்த சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரேக்கு பதிலடி தரும் வகையில் பிகார் செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

"மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது, பயங்கரவாதிகளை எதிர்த்துப் போரிட்ட என்எஸ்ஜி படையில் பிகார், உத்தரப் பிரதேசம், குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் இருந்தனர். அந்த நேரத்தில் பிகார், உத்தரப் பிரதேசம் போன்ற வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டும் சிவசேனை கூறவில்லை" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயரிழந்த உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரைச் சேர்ந்த வீரர்களின் தியாகத்தை மட்டும் உரிய முறையில் அங்கீகரித்திருப்பது, மராத்திய வீரர்களை புண்படுத்தும் செயலாகும் என சிவசேனையில் சாம்னா பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது பற்றி ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த ராகுல், "இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமானது. பால் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரேயின் கோணத்தில் இதை நான் பார்க்கவில்லை" என்றார்.

"நாட்டின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் செல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது. பிகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களை மகாராஷ்டிரத்துக்குள் நுழையவிடாமல் தடுக்கும் விஷயத்தில் நான் இனியும் மௌனமாக இருக்கப் போவதில்லை" என அவர் மேலும் தெரிவித்தார்.

Monday, February 1, 2010

புலிகள் இயக்க சிறுவர்கள் 56 பேர் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


கொழும்பு:விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த 56 சிறுவர்கள் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இலங்கையில் ராணுவத்தை எதிர்த்து சண்டையிட சிறுவர்கள் பலர் புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டனர். புலித் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பின் ஏராளமான புலிகள், ராணுவத்திடம் சரணடைந்தனர்.

அந்த இயக்கத்திலிருந்து வெளியேறிய சிறுவர்கள் பலர் வெளிகண்டா என்ற இடத்தில் உள்ள நவசேனாபுரா சீர்த்திருத்த மையத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 56 பேரை இலங்கை ராணுவம், அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தது.இலங்கை ராணுவத் தளபதி ரத்னாயகே முன்னிலையில் இந்த 56 சிறார்களும் பெற்றோரிடம் பாசமிகுதியில் ஒன்று சேர்ந்தனர்.

பிரபாகரன் மரணத்திற்கான ஆதாரம் சிபிஐ.,யிடம் உள்ளது: ப.சிதம்பரம்



புதுதில்லி, பிப்.1- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்தது தொடர்பான ஆவணங்கள் சிபிஐ.,யிடம் இலங்கை அரசு அளித்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

தில்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரபாகரனின் மரணத்தை உறுதிபடுத்தும் ஆவணங்களை இலங்கை அரசு தங்களிடம் அளித்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் என்னிடம் தெரிவித்துள்ளனர் என்று ப.சிதம்பரம் கூறினார்.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட மனு ஒன்றுக்கு ஜனவரி 27ம் தேதி பதில் அளித்த சிபிஐ அதிகாரி பி.என். மிஸ்ரா 'பிரபாகரனின் மரணச் சான்றிதழ் இன்னும் தங்களுக்கு கிடைக்கவில்லை' என்று கூறியிருந்தார்.

பூகம்பம் பாதித்த ஹைதியில் குழந்தைகளை கடத்திய 10 அமெரிக்கர்கள் கைது


போர்ட் ஆப் பிரின்ஸ், பிப். 1:
பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஹைதி தீவிலிருந்து 33 குழந்தைகளை கடத்திச் செல்ல முயன்றதாக 10 அமெரிக்கர்களை ஹைதி போலீசார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில் வசிக்கும் ஹைதி மக்கள் தொடர்பு அதிகாரி இந்தத் தகவலை தெரிவித்தார்.
சில்ஸ்பி லாரா லாவோன் என்ற அமெரிக்கப் பெண்ணின் தலைமையில் அமெரிக்கர்கள் 33 குழந்தைகளைக் கூட்டிச் சென்ற போது மால்பாசோ என்ற எல்லையோர நகரில் பிடிபட்டனர் என ஹைதி போலீசார் கூறினர்.
அவர்கள் பணம் கொடுத்து ஹைதி குழந்தைகளை வாங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதைத் தவிர ஹைதி அரசின் அனுமதி இல்லாமல் மைனர்களான குழந்தைகளை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதுவும் சட்டமீறலாகும் என ஹைதி அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தப் புகார்களை லாரா லாவோன் மறுத்தார். இங்கு அனாதைக்குழந்தைகளுக்காக ஆதரவு இல்லம் அமைப்பது எங்கள் திட்டம். அதற்காக நிலம் கூட வாங்கிவிட்டோம். விரைவில் அங்கு கட்டடம் அமைக்கப்படும். அது வரை காபார்த்தி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் குழந்தைகளை தங்கவைக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த அநாதைக் குழந்தைகளின் பக்கம் அனைவரின் கவனத்தையும் திருப்பவே அவர்களை அழைத்துச் சென்றோம் என லாரா லாவோன் தெரிவித்தார்.
அமெரிக்கர்கள் அழைத்துச் சென்ற குழந்தைகள் எல்லாம் போர்ட் ஆப் பிரின்ஸ் நகருக்கு வெளியே உள்ள அரசு அனாதைகள் இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஹைதியிலிருந்து இளங்குழந்தைகளை சட்ட விரோதமாக கடத்திச் செல்ல நடக்கும் முயற்சிக்குஹைதி பிரதமர் ஜீன் மாக்ஸ் பெல்லாரிவ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல நிதி (யுனிச்செப்) அதிகாரிகளும் கண்டனம் செய்துள்ளனர். தரை வழி எல்லைகள், விமான நிலையங்களில் எங்கள் அதிகாரிகள் கூடுதல் விழிப்புடன் செயல்படுவார்கள் என யுனிச்செப் கூறியுள்ளது.

பேசும் படம்


இந்தியா & வங்கதேசம் எல்லையான அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் பகுதி வழியாக ஊடுருவுவதை தடுக்க முள் வேலி அமைக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் உள்ளவர்களுக்கு அசாம் எல்லைப்பகுதியில் உறவினர்கள் உள்ளனர். வேலி அமைக்கப்பட்டதால் அவர்களை பார்க்க வங்கதேசத்தினர் முன்புபோல் வரமுடியவில்லை. இதனால் வங்கதேச பகுதியில் இருந்து இந்திய பகுதியை கிராம மக்கள் பார்க்கின்றனர்
.