மக்கள் உரிமை படியுங்கள்

Monday, February 1, 2010

பிரபாகரன் மரணத்திற்கான ஆதாரம் சிபிஐ.,யிடம் உள்ளது: ப.சிதம்பரம்



புதுதில்லி, பிப்.1- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்தது தொடர்பான ஆவணங்கள் சிபிஐ.,யிடம் இலங்கை அரசு அளித்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

தில்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரபாகரனின் மரணத்தை உறுதிபடுத்தும் ஆவணங்களை இலங்கை அரசு தங்களிடம் அளித்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் என்னிடம் தெரிவித்துள்ளனர் என்று ப.சிதம்பரம் கூறினார்.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட மனு ஒன்றுக்கு ஜனவரி 27ம் தேதி பதில் அளித்த சிபிஐ அதிகாரி பி.என். மிஸ்ரா 'பிரபாகரனின் மரணச் சான்றிதழ் இன்னும் தங்களுக்கு கிடைக்கவில்லை' என்று கூறியிருந்தார்.

No comments: