மக்கள் உரிமை படியுங்கள்

Monday, February 1, 2010

புலிகள் இயக்க சிறுவர்கள் 56 பேர் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


கொழும்பு:விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த 56 சிறுவர்கள் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இலங்கையில் ராணுவத்தை எதிர்த்து சண்டையிட சிறுவர்கள் பலர் புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டனர். புலித் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பின் ஏராளமான புலிகள், ராணுவத்திடம் சரணடைந்தனர்.

அந்த இயக்கத்திலிருந்து வெளியேறிய சிறுவர்கள் பலர் வெளிகண்டா என்ற இடத்தில் உள்ள நவசேனாபுரா சீர்த்திருத்த மையத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 56 பேரை இலங்கை ராணுவம், அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தது.இலங்கை ராணுவத் தளபதி ரத்னாயகே முன்னிலையில் இந்த 56 சிறார்களும் பெற்றோரிடம் பாசமிகுதியில் ஒன்று சேர்ந்தனர்.

No comments: