மக்கள் உரிமை படியுங்கள்

Tuesday, March 16, 2010

ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி புற்றுநோயை குணப்படுத்தும் சிகிச்சை அறிமுகம்


நம்நாட்டில் 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர் ஓராண்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். சமீபகாலமாக நம்நாட்டில் மார்பக புற்றுநோயை விட கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களுக்கு, கீமோ சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகின்றன. இந்த சிகிச்சையால் முடி கொட்டுதல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகிய பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாது, புற்றுநோய் செல்களுடன் ஆரோக்கியமான செல்களும் அழிக்கப்படுகின்றன.

இந்த சிகிச்சைக்கு மாற்றாக புற்றுநோய் செல்களை அழிக்கும் வைரசை ரத்தத்தில் செலுத்தும் முறை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை ஏற்கனவே, பிரிட்டனில் நடந்துள்ளது. நல்ல பலன் கிடைத்துள்ளதால், அரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் கட்டமாக 20 முதல் 50 புற்றுநோயாளிகளுக்கு இந்த பரிசோதனை செய்யப்பட உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத எலிகளை கொண்டு ஒரு பரிசோதனை செய்யப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியில்லாத இரண்டு எலிகளின் கட்டியில் ஆன்கோலைட்டிக் வைரஸ்கள் செலுத்தப்பட்டன. இந்த வைரஸ் செலுத்தப்பட்டதும் எலிகளின் உடலில் இருந்த கட்டி இரண்டு வாரத்தில் மறைந்துவிட்டது. இந்த வைரஸ் புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால், மனிதர்களுக்கும் இந்த சோதனை நடத்தப்பட்டது. பிரிட்டனை தொடர்ந்து இந்தியாவில் இந்த சோதனை முதல் முறையாக தற்போது நடக்கிறது.

"China Approves World's First Oncolytic Virus Therapy For Cancer Treatment"

Oncolytic virus research got a welcome boost last November when Chinese regulators approved the world's first oncolytic viral therapy for cancer, Shanghai Sunway Biotech's genetically modified adenovirus H101.

"It's fantastic for the field," said John Bell, Ph.D., of the Ottawa Health Research Institute in Canada. "We needed to have something that was a success, and so I think this is a good first start."

"ALLAH KAREEM"

ஜப்பான் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் தயாரிக்க கூட்டுத் தொழில்நுட்பம்


ஜப்பானில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் கார்களை பிரபலப்படுத்த ஜப்பான் எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளர்கள் மற்றும் ஜப்பானிய கம்ªபனிகள் மற்றும் வெளிநாட்டுக் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து கூட்டு தொழில் நுட்ப கம்பெனி ஒன்றை உருவாக்கி உள்ளன.பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக நாடுகள் எல்லாம் முயற்சி செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் கார்களுக்கு பதிலாக எலக்ட்ரிக் கார்களை கம்பெனிகள் தயாரித்து வருகின்றன. இதனால் பெட்ரோல், டீசல் செலவு குறைகிறது.

எலக்ட்ரிக் கார்களுக்கு மாறுவதன் மூலம் பெட்ரோல், டீசல் உபயோகத்தைக் குறைத்து அதன் மூலம் நச்சு வாயுக்கள் வெளியாவதைக் குறைக்க வேண்டும் என்பது ஜப்பானிய அரசின் பருவநிலை மாற்றக் கொள்கையின் முக்கிய அம்சமாக உள்ளது.டொயோட்டா, நிசான், மிட்சுபிஷி, ஃபியுஜி ஹெவி இண்டஸ்ட்ரிஸ், டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனிய¤ன் பிரதிநிதிகள் டோக்கியோவில் கூடி இது குறித்து விவாதித்தனர். இந்தக் கம்பெனிகள் லீஃப் என்ற பெயரில் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்க உள்ளன.

எலக்ட்ரிக் கார்களுக்கான ரீசார்ஜிங்கின் போது இருக்கவேண்டிய வோல்டேஜ், வேகம், தொழில் நுட்பம் ஆகியவைகளுக்கான ஒரே மாதிரியான தரநிலைகளை கூட்டுத் தொழில் நுட்ப நிறுவனம் உருவாக்கும். ஜப்பானுக்கான தரநிலைகள் வகுக்கப்பட்ட பிறகு அவை சர்வதேச தரநிலைகளாக மாற்றப்படும்.