மக்கள் உரிமை படியுங்கள்

Wednesday, June 23, 2010

அப்துல் கலாம் புறக்கணிப்பா - செம்மொழி மாநாட்டில் வெடித்தது முதல் சர்ச்சை


தமிழர்களின் பெருமை மிகு மாநாடாக செம்மொழி மாநாடு கோவையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் மாநாட்டு நிகழ்ச்சி நிரலை பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் அதிர்ந்து போகிறார்கள்.உலகத் தமிழர்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கும் தமிழக அரசு அறிவியல் தமிழனாகவும் தமிழனின் பெருமையை உலகிற்கு உணர்த்திய சிறப்பிற்கு உரியவரும், இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவரான ஏவுகணை மனிதர் ஏ பி ஜே அப்துல்கலாம் அவர்களை ஏன் அழைக்கவில்லை என்ற வினா பூதாகாரமாக எழுப்பப்பட்டு வருகிறது.

தமிழக அளவில் உள்ள அனைத்து மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் வி.ஐ.பி.கள், சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளிலும் உள்ள முக்கியப் பிரமுகர்கள் வருகை தந்துள்ளனர். அல்லது வரவழைகப் பட்டுள்ளனர்.ஆனால் அப்துல் கலாம் ஏன் வரவில்லை? அப்துல் கலாம் திட்டமிட்டு புறக்கனிக்கப்பட்டாரா? போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.அப்துல் கலாம் புறக்கணிக்கப்பட்டது குறித்து சர்ச்சைகள் எழுந்து வருவது குறித்து மாநாட்டு பொறுப்பாளர்கள் விளக்கம் அளிக்க மறுத்து வருகின்றனர்.

அப்துல் கலாம் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றால் மீடியாக்கள் அவரைச் சுற்றியே வட்டமிடும். பொதுமக்களும் அவரைக் காணவே விரும்புவார்கள். குழந்தைகளும் மாணவர்களும் அவரோடு பேசப் போட்டி போடுவார்கள். இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட நிகழ்ச்சி நடத்துபவர்கள் விரும்பவில்லை. எனவேதான் அப்துல்கலாமை திட்டமிட்டே புறக்கணித்துவிட்டனர் என்று ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்.

நன்றி : இந்நேரம்.காம்

கஸா நிவாரண உதவி கப்பல் படுகொலை சரியானதே - இஸ்ரேல் !!


உலகை நடுக்கிய, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள ஃபலஸ்தீன் அகதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு வந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தி 9 பேரைப் படுகொலை செய்தச் செயலை இஸ்ரேல் நியமித்த விசாரணைக் குழு நியாயப்படுத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது."சூழ்நிலைக்கு ஏற்றவாறே இஸ்ரேலிய இராணுவம் சமூகச் சேவகரைச் சுட்டுக்கொன்றது" என்றும் "அச்சம்பவத்தில் பிழையேதுமில்லை" என்றும் இஸ்ரேலிய கப்பல் படை நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.

அதே சமயம், ஃபலஸ்தீனர்களுக்கு உதவி கொண்டு வந்த கப்பல் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் எடுத்துக்கொண்ட முன்னேற்பாடுகளில் பல பிழைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. "இராணுவம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை; தேவையான உளவு தகவல்கள் சேகரிக்கவில்லை; துப்பாக்கிச் சூடு நடத்தும் முன்னர் தண்ணீர் பாய்ச்சியடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை உபயோகித்தும் கப்பலில் இருந்த சமூக சேவகர்களைக் கைது செய்வதற்கு முயற்சி செய்யவில்லை; இராணுவ உடை அணிந்திருக்கவில்லை" முதலியவைகளை இஸ்ரேலிய இராணுவம் செய்தத் தவறுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.

துருக்கியைத் தலைமையாகக் கொண்டுப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எம்.பிக்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் அடங்கிய ஃபலஸ்தீன் நிவாரண கப்பல், கஸாவை நெருங்கும் முன் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இஸ்ரேலிய இராணுவம் தடுத்து நிறுத்திக் கப்பலில் உள்ளவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 9 பேரைக் கொன்றதோடு, ஃபலஸ்தீன் அகதிகளுக்குச் சென்ற நிவாரண உதவிப் பொருட்களையும் கையகப்படுத்தியது. சர்வதேசச் சட்டங்களை மீறிய இஸ்ரேலின் இந்தச் செயல்பாட்டினைக் குறித்துச் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பை இஸ்ரேல் அங்கீகரிக்காமல், இஸ்ரேலிய கப்பல் படையினைக் கொண்டு அச்சம்பவத்தைக் குறித்து விசாரித்து அறிக்கைத் தரக் கேட்டுக் கொண்டது எனப்து குறிப்பிடத்தக்கது.

சவூதியில் தயாராகும் முதல் கார்


ரியாத் : முழுக்க முழுக்க சவூதியிலேயே தயாராகும் முதல் காரை மன்னர் சவூத் பல்கலைகழக விஞ்ஞானிகளின் உருவாக்கியுள்ளனர். பாலைவன மானான கஜலை நினைவுபடுத்தும் விதத்தில் கஜல்1 என்று பெயரிடப்பட்டுள்ளன காரை மன்னர் அப்துல்லா பார்வையிட்டார்.

பாலைவன சூழலுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது இக்கார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலைவனம் உள்ளிட்ட எல்லா சாலைகளிலும் பயன்படுத்த கூடிய வகையிலும் உள்ளே பயணிகளுக்கு எல்லா வித செளகரியங்களும் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக சவூத் பல்கலைகழக பேராசிரியர் சையத் தார்விஷ் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாகவே சவூதி அரேபியா வழமையான எண்ணைய் உற்பத்தியை சார்ந்திருப்பதிலிருந்து பிற துறைகளில் முதலீடு செய்து வருகிறது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் வளைகுடாவில் சிறப்பான முறையில் பங்களிக்க முயற்சிக்கின்றது. ஆண்டுக்கு 20,000 கார்கள் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முதல் முஸ்லீம் வீரர் சேர்ப்பு


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உஸ்மான் காஜா என்பவர் இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற முதல் முஸ்லீம் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 14 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இதில்தான் உஸ்மான் இடம் பிடித்துள்ளார்.முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி இது. இதில் இடம் பெற்றுள்ள உஸ்மானுக்கு 23 வயதாகிறது. இடது கை பேட்ஸ்மேன் ஆவார்.காயமடைந்துள்ள பிலிப் ஹ்யூக்ஸுக்குப் பதிலாக உஸ்மானுக்கு இடம் கிடைத்துள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதற்காக உஸ்மானுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஆண்ட்ரூ ஹிட்லிட்ச் கூறுகையில், சிறப்பாக விளையாடியதற்காக உஸ்மானைத் தேர்வு செய்துள்ளோம். எந்த வரிசையில் இறக்கினாலும் சிறப்பாக விளையாடக் கூடியவராக இருக்கிறார் உஸ்மான். எனவே அவருக்கு இடம் கிடைத்துள்ளது என்றார்.உஸ்மான் காஜா, 1986ம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.