மக்கள் உரிமை படியுங்கள்

Saturday, May 22, 2010

குணங்குடி ஹனீபா உள்பட 8 பேர் விடுதலை


3 ரயில்களில் நடந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட
குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேரை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று விடுதலை
செய்தது. 13 ஆண்டுகளாக சிறையில் வாடிய குணங்குடி ஹனீபா உள்ளிட்ட சகோதரர்கள் இன்று விடுதலை. அல்ஹம்து லில்லாஹ்.குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு. 1997ம் ஆண்டு சேரன் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 17 பேர் பலியாயினர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக குணங்குடி ஹனீபா உள்ளிட்டோர் கைது
செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து
வந்தது.இந் நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்து நீதிமன்றம்
உத்தரவிட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

ஆனால் இழந்த அந்த 13 வருட வாழ்க்கை திரும்ப வருமா ??