மக்கள் உரிமை படியுங்கள்

Monday, February 22, 2010

கிழக்கிந்தியக் கம்பெனி : விலை கொடுத்து வாங்கினார் ஒரு இந்தியர்


லண்டன் : இந்தியாவை நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆண்ட "கிழக்கிந்திய கம்பெனி' யை இப்போது ஒரு இந்தியர் வாங்கியுள்ளார். கி.பி., 1600ல் பிரிட்டனில் பலதரப்பட்ட வியாபாரிகள் சேர்ந்து, வெளிநாடுகளில் பல்வேறு பொருட்களை வியாபாரம் செய்து தம்நாட்டுக்கு செல்வத்தைச் சேர்ப்பதற்காக துவங்கப்பட்டதுதான் கிழக்கிந்தியக் கம்பெனி. இதை அப்போதைய பிரிட்டன் ராணி எலிசபெத் -1 அங்கீகரித்தார். பின் அந்தக் கம்பெனி, இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் கால்பதித்து வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தது. அத்துடன் பிரிட்டன் அரசைப் போல் தனக்கான ராணுவம், கப்பல்கள், கணக்கற்ற ஊழியர்கள், இந்தியாவில் உயர்ந்த பதவிகள், பணம் போன்றவற்றைக் கொண்ட ஆலமரமாக வளர்ந்தது.


கடந்த 1857ல் நடந்த முதல் இந்திய சுதந்திரப் போரையடுத்து கிலியடைந்த பிரிட்டன், இந்திய நிர்வாகத்தை கம்பெனியிடமிருந்து பறித்து விக்டோரியா ராணியின் நேரடிப் பார்வையில் கொண்டு வந்தது. பின், அதையே காரணம் காட்டி, 1874ல் கம்பெனியை தேசிய மயமாக்கியது. கம்பெனியின் முக்கிய வர்த்தகம், டீ, காபி மற்றும் ஆடம்பரப் பொருட்களை ஐரோப்பிய நாடுகளில் கொள்முதல் செய்து உலகம் முழுவதும் விற்பதுதான். இந்தியாவை செருக்குடன் கட்டியாண்ட அந்தக் கம்பெனி இப்போது ஒரு இந்தியர் கையில். ஆம்... மும்பையைச் சேர்ந்த சஞ்சீவ் மேத்தா என்ற இளம் தொழிலதிபர், அந்தக் கம்பெனியை நிர்வகித்து வந்த 40 பங்குதாரர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கி விட்டார். அந்தக் கம்பெனியில் 240 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்து, அதன் முதல் லண்டன் கிளையை மார்ச் மாதத்தில் திறக்க இருக்கிறார். "ஒரு இந்தியனாக என் நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்; இந்தக் கம்பெனியை நான் வாங்கிய போது என்னுள் எழுந்த உணர்ச்சிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது ' என்று உணர்ச்சிவயப்பட்டார் சஞ்சீவ் மேத்தா.

ஹமாஸ் தலைவர் கொலை பின்னணியில் இஸ்ரேலிய பிரதமர் தீவிரவாதி நெதன்யாகு.

துபாயில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரின் படுகொலைக்கு தீவிரவாத இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு அனுமதியளித்தான் என டைம்ஸ் ஆன்லைன் என்ற பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து ஹமாஸின் ராணுவப்பிரிவான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாமின் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் மப்ஹூஹ் கொல்லப்பட்டிருந்தார். அவரைக் கொன்ற கொலையாளிகளை பற்றி துபாய் போலீஸ் தீவிரவமாக விசாரித்து கண்டறிந்தது. இதற்கு க்ளோஸ் சர்க்யூட் டிவியில் பதிவான காட்சிகள் குற்றவாளிகளை அடையாளம் காண உதவின. இக்குற்றவாளிகள் அனைவரும் ஐரோப்பிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகளில் பயணம் செய்துள்ளனர்.

ஆனால் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கொலையாளிகள் தங்கள் நாட்டைச்சார்ந்தவர்களில்லை என்று உறுதிப்படக் கூறின. மேலும் இவர்கள் மொஸாத் என்ற இஸ்ரேலிய தீவிரவாத உளவு அமைப்பைச் சார்ந்தவர்கள் என்றும் குற்றஞ்சாட்டின.

துபாய் போலீஸும் குற்றவாளிகள் தீவிரவாத மொஸாதைச் சார்ந்தவர்களென்றும் மொஸாதின் தலைவரைக் கைதுச் செய்யவேண்டுமென்றும் கோரியது. ஆனாலும் தீவிரவாத இஸ்ரேல் இதுபற்றி இதுவரை வாய்திறக்கவில்லை. இந்நிலையில் டைம்ஸ் ஆன்லைன் என்ற பத்திரிகை இதுபற்றிக் கூறுகையில், இஸ்ரேலிய பிரதமர் தீவிரவாதி நெதன்யாகு கடந்த ஜனவரி மாத துவக்கத்தில் கொலைச் செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலை மொஸாதின் தலைவர் மெய்ர் தகானைச் சந்தித்து அளித்தார் என மொஸாத் வட்டாரத்தைச் சார்ந்த சிலர் தெரிவித்துள்ளனர்.

மஹ்மூத் அல் மப்ஹூஹ் உள்ளிட்ட சிலரைக் கொல்வதற்கான ஆபரேசனை நிறைவேற்ற இறுதி ஒப்புதல் அளித்தார் என மொஸாத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மப்ஹூஹை கொல்வதற்கு முன்னால் டெல் அவீவில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து ஒத்திகை பார்த்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.