மக்கள் உரிமை படியுங்கள்

Wednesday, February 3, 2010

அமெரிக்க ஏவுகணை திட்டத்திற்கு இரான் கண்டனம்


ஏவுகணை தாக்குதலுக்கு எதிரான புதிய தற்காப்பு கட்டமைப்பு ஒன்றை வளைகுடா பிராந்தியத்தில் நிறுவுவதற்கான அமெரிக்க திட்டத்திற்கு இரான் கடுமையாக எதிர்பு தெரிவித்திருக்கிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இரான் எதிர்ப்பு நிலையை உருவாக்க அமெரிக்கா முயல்வதாக இரானின் வெளியுறவுத் துறையின் பேச்சாளர் குற்றம் சாட்டினார்.

இரான் தனது அண்டை நாடுகளுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலையும் உருவாக்கவில்லை என்று இரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லாடிஜானி அவர்கள் தெரிவித்தார்.

இரான் அல்லது வடகொரியா தயாரிக்கக்கூடும் என்று கருதப்படும் தொலைதூரம் சென்று தாக்கவல்ல ஏவுக ணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கவல்ல ராக்கெட்டுகளை அமெரிக்கா நேற்று திங்கட்கிழமை பரிசோதித்தது.

No comments: