மக்கள் உரிமை படியுங்கள்

Tuesday, February 9, 2010

மேற்கு வங்க அரசு பணியில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு


மேற்கு வங்கத்தில் அரசு பணிகளில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா அறிவித்துள்ளார்.இது குறித்து கொல்கத்தாவில் புத்ததேவ் பட்டாச்சார்யா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
முஸ்லிம்களுக்கு அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான கமிஷன் கடந்த ஆண்டு மத்திய அரசிடம் அறிக்கை அளித் தது.
இதில் மத்திய அரசின் முடிவுக்கு காத்திருக்காமல் அறிக்கையை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மேற்கு வங்கத்தில் சமூக, கல்வி, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு அரசு பணிகளில் 10% இடஒதுக்கீடு அளிக்கப்படும்.
சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் முஸ்லிம்களை அடையாளம் காணும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஏற்கனவே 7% இடஒதுக்கீடு உள்ளது. பின்தங்கிய நிலையில் இருக்கும் முஸ்லிம்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் இவ்வாறு புத்ததேவ் பட்டாச்சார்யா கூறினார்.
இடதுசாரி முன்னணி தலைவர் பிமன் போஸ் கூறுகையில்,"மத அடிப்படையில் இல்லாமல் சமூக, கல்வி, பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தேவைப்படுகிறது" என்றார்.கொல்கத்தா மாநகராட்சிக்கு மே மாதம் தேர்தல் நடக்க உள்ளது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இது முன்னோட்டமாக கருதப்படும் நிலையில்,முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

"மாஷாஅல்லாஹ்"

No comments: