மக்கள் உரிமை படியுங்கள்

Tuesday, February 9, 2010

சிறுபான்மையினர் முன்னேற்றம் உறுதியான நடவடிக்கை தேவை - காங்கிரஸ்


புதுடெல்லி, பிப்.9:சிறுபான்மை மக்கள் முன்னேற்றத்துக்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.ஆந்திராவில் அரசு பணிகளில் முஸ்லிம்களுக்கு பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் 4 சதவீதம் அளிக்க அந்த மாநில அரசு இயற்றிய சட்டம் செல்லாது என்று ஆந்திர உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதே நேரத்தில், மேற்கு வங்கத்தில் அரசு வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா அறிவித்துள்ளார்.

இந்த நிலவரம் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி டெல்லியில் நேற்று கூறியதாவது:சிறுபான்மை மக்களை தேசிய வளர்ச்சியில் ஒருங்கிணைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் ஆதரிக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை கறுப்பு, வெள்ளை என்ற கோணத்தில் பார்க்க கூடாது. இந்தப் பிரச்னையிலும், ஆந்திர உயர் நீதிமன்றத்தின் முடிவிலும் பல்வேறு விஷயங்கள் அடங்கியுள்ளன.இவ்வாறு திவாரி கூறினார்.

No comments: