மக்கள் உரிமை படியுங்கள்

Tuesday, February 9, 2010

இலங்கை ராணுவ மாஜி தளபதி சரத் பொன்சேகா திடீர் கைது


கொழும்பு: இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா நேற்றிரவு கைது செய்யப்பட்டார். ராணுவ போலீசார் அவரை கைது செய்தனர். இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், ராஜபக்ஷேயை எதிர்த்துப் போட்டியிட்டவர் அந்நாட்டு ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா. இவர் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார்.

கடந்த மாதம் 27ம் தேதி, அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த போது, கொழும்பில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த பொன்சேகா, தனது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து இலங்கை அதிபர் ராஜபக்ஷேவையும், அவரது குடும்பத்தினரையும் தீர்த்துக் கட்டுவதற்கு, சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அவரை ரகசிய இடம் ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், அங்கு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: