மக்கள் உரிமை படியுங்கள்

Thursday, March 11, 2010

பப்பாளி இலைச் சாறு புற்றுநோய் செல்களை அழிக்கிறது


உலர்ந்த பப்பாளி இலை தூளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கசாயம் அல்லது வடி நீர் பத்து வெவ்வேறு வகையான புற்றுக்கட்டிகளின் செல்களைக் கொன்று அதன் வளர்ச்சியைக் குறைக்கிறது என புளோரிடா பல்க¬லைக் கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் பப்பாளி இலையிலிருந்து எல்லா வகையான புற்று நோய்களுக்கும் மருந்து தயாரிக்கும் வாய்ப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.புளோரிடா பல்கலைக் கழக ஆய்வாளர் டாக்டர் நாம் தாங் மற்றும் ஜப்பானில் உள்ள ஆய்வாளர்கள் பப்பாளி இலையில் உள்ள வேதிய¤யல் பொருள்கள் புற்றுக்கட்டிகள் மீது என்ன பாதிப்பை ஏற்படுத்துகின்றன என ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். ஆய்வுக்காக பப்பாளி இலையை காய வைத்து இடித்து பொடியாக்கினர். அந்த பப்பாளி இலைத் தூளை கொதிக்கும் வெந்நீரில் போட்டு அதில் இருந்து வடி நீர் தயாரித்தனர்.

ஏற்கெனவே ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்ட செர்வைக்ஸ், மார்புப் புற்று, ஈரல் புற்று, நுரையீரல் புற்று, கணையப்புற்று போன்ற 10 வகை புற்றுக்கட்டிகள் மீது நான்கு திறனிலைகளில் தயாரிக்கப்பட்ட இந்த வடிநீரைச் செலுத்தி சோதனை செய்தனர். எல்லா புற்று நோய்க்கட்டிகளின் வளர்ச்சி வேகமும் குறைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. வடி நீர் செலுத்தப்பட்ட 24 மணி நேரத்துக்குப் பிறகு புற்றுக் கட்டிகளை சோதிக்கும் புற்று நோய்க்கட்டிகன் வளர்ச்சி குறைந்ததை அறிந்தனர். எவ்வளவு வடி நீர் அதிகமாக ஒரு புற்றுக்கட்டிக்கு தரப்பட்டதோ அந்த அளவுக்கு புற்றுகட்டிகளின் வளர்ச்சி குறைவாக இருந்தது.
பப்பாளி இலை வடி நீர் எப்படி புற்றுக்கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கிறது என்பதை அறிய லிம்போமோ வகைப் புற்றுக்கட்டிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டன. புற்றுக்கட்டிகள் வளரக் காரணமான செல்கள் தாமாகவே அழிய தேவையான தூண்டுதலை பப்பாளி இலைவடிநீர் தருவதாகக் கண்டறிந்துள்ளனர்.

No comments: