மக்கள் உரிமை படியுங்கள்

Thursday, May 6, 2010

முஸ்லீம்களின் சுதந்திரத்தை பறித்தவர்கள் விடுதலைப் புலிகள் - இலங்கை அதிபர்.ராஜபக்சே


கொழும்பு: யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் பிற சமூகத்தினருடன் சுமூகமான முறையில் வாழ்ந்து வந்த முஸ்லீ்ம்கள விரட்டியடித்து அவர்களின் சுதந்திரத்தைப் பறித்தவர்கள் விடுதலைப் புலிகள் என்று கூறியுள்ளார் இலங்கை அதிபர்.ராஜபக்சே.

கொழும்பில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் முஸ்லீம் பெண்களிடையே இன்று ராஜபக்சே பேசினார்.அப்போது அவர் கூறுகையில்,90களில் இந்த மூன்று மாவட்டங்களிலும் முஸ்லீகளை விரட்டியடிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர் விடுதலைப் புலிகள்.

முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் பிற சமூகத்தினருடன் இணக்கமாக வாழ்ந்து வந்த முஸ்லீம்களுக்கும், பிற சமூகத்தினருக்கும் இடையிலான ஒற்றுமையை, நல்லிணக்கத்தை சீர்குலைத்தவர்கள் புலிகள்.

அங்கிருந்து விரட்டப்பட்ட முஸ்லீம்கள் அகதிகளாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள முகாம்களில் தற்போது வாழ்ந்து வருகின்ரனர். இவர்களை சொந்த ஊர்களுக்கு மீள் குடியேற்றும் செய்யும் நடவடிக்கைள் விரைவில் தொடங்கும்.

இலங்கையில் அனைத்து சமூகத்தினருக்கும் இடையிலான உறவு வலுவாகவே உள்ளது. வடக்கு மாகாணத்திற்கு வடக்கில் வசந்தம் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம் என்றார் ராஜபக்சே.

No comments: