மக்கள் உரிமை படியுங்கள்

Tuesday, June 15, 2010

அப்பா கஷ்டத்தை நினைத்து படித்தேன்..ஜாஸ்மின்


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 495 மார்க் எடுத்த, மாநிலத்தின் முதல் மாணவி ஜாஸ்மின்: சின்ன வயசில இருந்தே, நான் நன்றாக படிப்பேன். அப்பா, எட்டாம் வகுப்பு வரைதான் படிச்சார். அதனால, அவர் அடிக்கடி பேசும்போது, "நன்றாக படிக்கணும்மா... படித்தால்தான் குடும்பம் முன்னேற முடியும்... வேற எந்த நினைப்பும் உங்களுக்கு வேண்டாம்... படிக்கிற வயசுல ஒழுங்கா படிச்சா பிற்காலம் சந்தோஷமாக இருக்கும்'னு, சொல்லுவார். அது ரொம்ப உண்மைன்னு இப்பத் தெரியுது. நான் நன்றாக படித்ததால், எங்களின் இந்த சிறிய வீட்டைத் தேடி அமைச்சர்கள், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள்ன்னு, பலதரப்பட்ட பெரியவர்கள் வந்து, வாழ்த்திட்டுப் போறாங்க. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.

அப்பா காலைல எம்-80 பைக்ல துணிகளை எடுத்துக் கட்டிட்டு கிளம்புவாங்க. அப்ப நாங்க உதவி செய்வோம். திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமம் கிராமமா போய் வியாபாரம் பார்ப்பாங்க. சில நேரம் இரண்டு நாள் கழிச்சுதான், திரும்பி வருவாங்க. "கஷ்டப்பட்டு எங்களை படிக்க வைக்கிறாங்களே'ன்னு, மனசுல வச்சுக்கிட்டே படிச்சேன். நான் மாநிலத்தில் முதல் மார்க் வாங்குனதுல என்னை விட எங்க அம்மா, அப்பாதான் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. அப்பா வியாபாரம் செய்யப்போகும் பல கிராம மக்கள், பேப்பர்ல எங்க குடும்பப் படத்தைப் பார்த்துட்டு, அப்பாவுக்கு போன் பண்ணி வாழ்த்துச் சொன்னாங்க. அது மறக்க முடியாத சம்பவம்.

அண்ணன் இம்ரான், "குடல் இறக்கம்' என்ற நோயால் அவதிப்பட்டார். உடனே ஆபரேஷன் செய்யணும்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. அந்தச் சமயம் அண்ணனுக்கு பத்தாம் வகுப்புத் தேர்வு. எக்ஸாமா? ஆபரேஷனா? என பிரச்னை வந்தது. "எனக்கு நீதான்டா முக்கியம். எக்ஸாம் அப்புறம் எழுதிக்கலாம்'ன்னு, உடனே ஆபரேஷன் செய்யச் சொல்லிட்டார் அப்பா. இனிமேல் அவன் படிக்கிறேன்னு சொன்னது எனக்கு சந்தோஷமா இருக்குது.

No comments: