மக்கள் உரிமை படியுங்கள்

Monday, June 28, 2010

செம்மொழி மாநாட்டில் கலாமும் பங்கேற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்-தமுமுக


உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கருத்துரை இடம் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என மனித நேய மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

மனித நேய மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளரும், தமுமுக மாநில தலைவருமான ஜவாஹிருல்லா இதுகுறித்துக் கூறுகையில்,

கம்யூட்டரில் தமிழை பயன்படுத்துவதற்கு உரிய மென்பொருளை (தமிழ் யூனிகோடு) உருவாக்கி அனைவருக்கும் இலவசமாக வழங்கியவர் தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டினத்தை சேர்ந்த உமர்தம்பி. மறைந்துவிட்ட அவர் நினைவாக செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்கம் அமைக்க வேண்டும் என முதல்வரிடம் மனு கொடுத்தோம். அதன்படி மாநாட்டில் உமர்தம்பி ஆய்வரங்கம் அமைக்கப்பட்டது. இதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். உமர்தம்பியின் பணிகளை பாராட்டி அவர்கள் குடும்பத்திற்கு சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் விருது வழங்கினார்.

கணிணி தமிழ் ஆய்வுப்பிரிவு துவக்க வேண்டும் என பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் வலியுறுத்தினார். அப்பிரிவுக்கு உமர்தம்பியின் பெயர் சூட்ட வேண்டும். வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், திருக்குறளை உதாரணம் காட்டி பேசுபவர் முன்னாள் ஜானதிபதி அப்துல் கலாம். நம் நாடு அறிவியல் துறையில் வளர்ச்சி பெற பாடுபட்டவர் அவர். அவரை மாநாட்டிற்கு அழைத்திருக்க வேண்டும். அவரது கருத்துரை செம்மொழி மாநாட்டில் இடம் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றார்.

நன்றி : thatstamil.com

No comments: