மக்கள் உரிமை படியுங்கள்

Sunday, July 11, 2010

மக்கள் தொகை... 2050-ல் சீனாவை விஞ்சும் இந்தியா !


கடந்த 100 ஆண்டுகளில் ஐந்து மடங்காக அதிகரித்துள்ள இந்திய மக்கள் தொகை, 2050-ல் சீனாவை விஞ்சும் என்று அரசு கணித்துள்ளது.இந்திய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் தொடர்பான அரசின் ஆய்வறிக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் தொகை 1.4 சதவீதம் அதிகரித்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் காலக்கட்டத்தில் சீனாவின் மக்கள் தொகை பெருக்கத்தின் சதவீதம் 0.6 மட்டுமே என்பது கவனத்துக்குரியது.கடந்த 2009-ல் இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 119.8 கோடி. அப்போது, சீனாவின் மக்கள் தொகை 134.5 கோடி.பாகிஸ்தானின் மக்கள் தொகை 18 கோடி. கடந்த ஐந்து ஆண்டுகளில், பாகிஸ்தானின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.2 ஆக இருந்திருக்கிறது.

இந்தியாவின் மக்கள் தொகை 2050வது ஆண்டில் 161.38 கோடியாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில், சீனாவின் மக்கள் தொகை 141.7 கோடியை அடைந்திருக்கும்.மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் 'ஜனசக்திய ஸ்திர்தா கோஷ்' ஆய்வறிக்கையின்படி, இப்போது காணப்படுகின்ற வேகத்தில் இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி நீடித்தால், அடுத்த 50 ஆண்டுகளில் மக்கள் தொகையின் எண்ணிக்கை இரு மடங்கு ஆகக் கூடும் என்று தெரிகிறது.

No comments: