மக்கள் உரிமை படியுங்கள்

Thursday, July 22, 2010

புதிய கல்லூரி தொடங்க முஸ்லிம்களுக்கு வக்பு வாரிய நிலம் !


புதிய கல்லூரிகள் தொடங்க முன்வரும் முஸ்லிம்களுக்கு வக்பு வாரிய நிலங்களை அளிக்க வாரியம் முன் வந்துள்ளது.இது குறித்து, தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அப்துல்ரகுமான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. 2020ம் ஆண்டுக்குள் தற்போதுள்ள 12.4 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக மாணவர் சேர்க்கையை உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்காக, பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபில், “பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கையை 700 ஆகவும், கல்லூரிகளின் எண்ணிக்கையை 25 ஆயிரமாகவும் அதிகரிப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் புதிய கல்லூரிகளை தொடங்க முன்வரும் முஸ்லிம்களை ஊக்குவிக்க வாரியம் முன்வந்துள்ளது. இதன்படி, கல்லூரி தொடங்குவதற்கான நிலங்களை தமிழ்நாடு வக்பு வாரியம் வழங்கும். இந்த நல்ல வாய்ப்பை முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments: