மக்கள் உரிமை படியுங்கள்

Saturday, July 24, 2010

போலி என்கெளண்டர்: சிபிஐயால் தேடப்படும் குற்றவாளி குஜராத் அமைச்சர் அமித் ஷா ராஜினாமா


அகமதாபாத்: சோராபுதீன் ஷேக், அவரது மனைவி கெளசர் பீ ஆகியோரை போலி என்கெளண்ட்டரில் கொலை செய்ததாக சிபிஐயால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட குஜராத் உள்துறை இணையமைச்சர் அமித் ஷா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்தக் கொலைகளுக்கு சாட்சியான பிரஜாபதியையும் அமித் ஷா போலீசாரை வைத்து போலி என்கெளண்டர் நடத்தி கொலை செய்ததாகவும் வழக்குப் பதிவாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ அனுப்பிய சம்மன்களையடுத்து அமித் ஷா தலைமறைவானார். இதையடுத்து அவரைக் கைது செய்ய சிபிஐ தனிப் படைகளை அமைத்தது. அவரது அரசு அலுவலகத்திலும் சிபிஐ ரெய்ட் நடத்தியது.இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் நரேந்திர மோடியிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளார்.

நரேந்திர மோடியின் வலது கரமான இவர் மீது ஆள் கடத்தல்,கொலைகள்,கொலைச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவாகியுள்ளதால் எந்த நேரமும் கைதாகலாம் என்று தெரிகிறது.அவருக்கு முன் ஜாமீன் வழங்க சிபிஐ நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

No comments: