மக்கள் உரிமை படியுங்கள்

Wednesday, June 9, 2010

போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் தீர்ப்பு-! பாதிக்கப்பட்டவர்கள் கொந்தளிப்பு!



26 ஆண்டுகளுக்குப் முன்பு போபாலில் நிகழ்ந்த விஷவாயுக் கசிவில் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் பலியானார்கள்.பல்லாண்டுகள் உருண்டோடிய பின்னரும் அவர்களுக்கு நிவா ரணங்களும் உதவிகளும் நியா யமான முறையில் கிடைக்கவில் லை. குற்றவாளிகள் தண்டிக் கப் படவில்லை.

இந்நிலையில் 26 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 3 ஆம் தேதி 1984ல் நிகழ்ந்த அந்த துயரச்சம்பவத்தை யாரும் மறக்கத் தயாராக இல் லை. 85 வயதான மஹிந்தரா உள்பட 8 பேரின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 304ஏ, 304, 336, 337 மற்றும் 338ன் படி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

1. யூனியன் கார்பைடு முன்னாள் சேர்மன் கேசப் மஹிந்தரா.
2. யூனியன் கார்பைடு நிறுவன நிர்வாக இயக்குனர் விஜய் கோ கலே.
3. துணைத்தலைவர் கிஷோர் குமார்.
4. மேலாளர் ஜே.முகுந்த்.
5. துணை மேலாளர் ஆர்பி.ராய் சவூத்ரி, (இறந்து விட்டார்).
6. தயாரிப்பு நிர்வாகி எஸ்.பி. சவுத்ரி.
7. திட்ட கண்காணிப்பாளர் & கே.வி.ஷெட்டி.
8. தயாரிப்பு உதவியாளர் & ஷகீல் குறைஷி.

உள்ளிட்டோர் குற்றவாளிகள் என நீதிபதி மோகன் பி.திவாரி தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பில் யூனியன் கார்பைடு நிறுவனங்கள் அமெரிக் காவைச் சேர்ந்தவருமான வா ரன் ஆண்டர்சன் குறித்து ஒரு வார்த்தையும் கூறப்படாதது பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பு வெளி வந்தவுடன் நீதி தோற்று விட்ட தாகக் கூறி மக்கள் பெரும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தத் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதா கவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரி வித்தனர்.

1984 டிசம்பர் 3&ம் தேதி யூனியன் கார்பைடு இண்டியா லிமிடெட் என்ற தொழிற்சாலையில் வெளி யான மீத்தைல் ஐசோசயனேட் விஷ வாயு வெளியாகி ஏறக்குறைய எட்டுலட்சம் மக்கள் இந்த விஷவாயுவை சுவாசித்தனர். 20,000 மக்கள் இந்த வாயுவை சுவாசித்து மாண்டனர். ஆனால் உண்மையில் உயிரிழப்புகள் இதை விட அதிகம் இருக்கக் கூடும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஏமாற்றங்களும் ஏக்கங்களும் நிறைந்த போபால் விஷவாயு சம்பவத்தில் நீதி தாமதமானதைக் கண்டித்து மக்கள் பல்வேறு போராட்டங்களில் குதித்தனர்.இருப்பினும் நீதி தாமதிக்கப் பட்டதால் மக்கள் கொந்தளிக்கத் தொடங்கினர்.குறிப்பாக யூனியன் கார்பைடு நிறுவனர் வாரன் ஆண்டர்சன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மக்களின் கோபம் பன்மடங்கு அதிகரித்தது.

அமெரிக்காவில் சுகபோகமாக வாழும் வாரன் ஆண்டர்சனை இன்றுவரை இந்தியா கொண்டு வர எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 3008 ஆவ ணங்கள், 178 சாட்சிகள் என கால்நூற்றாண்டுகளுக்கு மேலும் வழக்கு நடைபெற்றும் நீதி கிடைக் காத காரணத்தால் மக்களின் போராட்டம் வெடித்தது.இந்த லெட்சணத்தில் குற்ற வாளிகளில் 7 பேர் பினையில் விடுதலையாகி நீதியை கேலிகூத் தாக்கியுள்ளனர். மக்களின் கோபம் போராட்டமாக வெடித்து உள்ளது.

No comments: