மக்கள் உரிமை படியுங்கள்

Wednesday, July 7, 2010

ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப பிரிட்டன், ஜெர்மனி விமான நிலையங்கள் மறுப்பு.


ஈரான் நாட்டு விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப பிரிட்டன்,ஜெர்மன், குவைத் நாட்டு விமான நிலையங்கள் மறுத்துள்ளன. அணு ஆராய்ச்சி பணியில் ஈடுபடும் ஈரானை முடக்க அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பல வழிகளில் முயன்று வருகின்றன. பொருளாதார, தொழில்நுட்ப, பாதுகாப்பு, வர்த்தகத் தடைகள் விதித்தாலும் ஈரானின் அணு ஆராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து வருகின்றன.

இந் நிலையில் ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் இல்லை என்று கூறி அடுத்த ஆயுதத்தை பிரயோகம் செய்துள்ளன இந்த நாடுகள்.இதன்மூலம் ஈரான் நாட்டு விமானத்துறையை சீர்குலைக்கவும்,அதன் வருவாயைத் தடுக்கவும் முயற்சி செய்யப்படுவதாகத் தெரிகிறது.ஈரான் மீதான இந்த விமான எரிபொருள் தடைக்கு மேலும் பல நாடுகளின் ஆதரவைப் பெறவும் முயற்சி நடக்கிறது.

அதே போல ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டாம் என்று ஐரோப்பாவில் உள்ள தனது பெட்ரோலிய பங்குகளுக்கு பிரிட்டிஷ் பெட்ரோலியம் மற்றும் ஷெல் நிறுவனம் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளன.தங்களது விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப மறுப்பது சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது என்று ஈரான் ஏர்லைன்ஸ் யூனியனின் செயலாளர் மெஹ்தி அலியாரி கூறியுள்ளார். இதற்கிடையே தங்கள் விமானங்களுக்கு தடை விதித்த நாடுகளின் விமானங்கள், கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்ப மாட்டோம் என்று ஈரான் நாட்டு மூத்த அரசியல் தலைவரான ஹெஸ்மதுல்லா பலாஹத்பிசே தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஈரான் மீது அமெரிக்க காங்கிரஸ் கொண்டு வந்த மிகக் கடுமையான தீர்மானத்தில் அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்டார்.அதன்படி,ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் அபராதம் விதிக்கலாம்.

No comments: