மக்கள் உரிமை படியுங்கள்

Saturday, July 10, 2010

சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

தமிழகத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, பவுத்த, சீக்கிய, மற்றும் பாரசீக மதங்களை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வேண்டுவோர் பிளஸ் 1, பிளஸ் 2, ஐடிஐ, ஐடிசி, பாலிடெக்னிக், டிப்ளமோ இன் நர்சிங், ஆசிரியர் பயிற்சி, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு படிப்பவராக இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களையும் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

18 வயது பூர்த்தி அடையாத மாணவ, மாணவிகள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயருடன் கூட்டுக் கணக்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும்.இத்தகவல் சிறுபான்மை நல ஆணையர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments: